பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 11

267

போகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றி, நம்பிக்கையுடையவர்க்குக் கேட்டின் வாசனையும் இல்லாததாய் அகங்கார மமகாரங்களை உடைத்து அன்றிக்கே, ‘தனக்கேயாக வேணும்’ இவர் பிரார்த்தித்தபடியே இவ்வாத்துமாவினுடைய சொரூபத்திற்குத் தகுதியான பேற்றினைச் செய்து கொடுக்கும்.                          

(11)

    முதற்பாட்டில், உடல் சம்பந்தமான பேற்றினை விரும்பினார்; இரண்டாம்பாட்டில், மனத்தின் சம்பந்தமான பேற்றினை விரும்பினார்; மூன்றாம் பாட்டில், வாசிகமான பேற்றினை விரும்பினார்; நான்காம் பாட்டில், சொரூபத்திற்குத் தகுதியான பேற்றினை அறுதியிட்டார்; ஐந்தாம்பாட்டில், ‘நீர் யாராய் இப்பேற்றினை விரும்பினீர்?’ என்ன, ‘நான் யாராயினுமாக; உன்னை அனுபவித்து மகிழும்படி செய்தருளவேண்டும்’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘முக்கரணங்களாலும் உன்னைப் பிரீதி முன்னாக அனுபவிக்கச் செய்தருள வேண்டும்’ என்றார்; ஏழாம் பாட்டில், அப்படிச் சடக்கெனச் செய்யாமையாலே இன்னாதானார்; எட்டாம் பாட்டில், ‘சொரூபத்திற்குத் தகுதியாக நீ கணநேரம் என்னோடே அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலமெல்லாம் வேண்டேன்’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே கேட்டினைச் சூழ்த்துக்கொண்டேன்' என்றார்; பத்தாம் பாட்டில், ‘ஞான விசேடத்தைப் பண்ணித் தந்தோம் அன்றே?’ என்று, என்னை ஒருநாளும் என்கையில் காட்டித் தாராதொழிய வேண்டும் என்றார்; முடிவில், இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        எம்மாவீ டும்வேண்டா என்றனக்குஉன் தாளிணையே
        அம்மா அமையுமென ஆய்ந்துரைத்த - நம்முடைய
        வாழ்முதலாம் மாறன் மலர்த்தா ளிணைசூடிக்
        கீழ்மைஅற்று நெஞ்சே! கிளர்.
                      

(19)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.