பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

கள

பரிபாடல்

309

     கள்ளணி பசுந்துளவினவை கருங்குன் றனையவை


     55.   ஒள்ளொளியவை யொருகுழையவை
          புள்ளணி பொலங்கொடியவை
          வள்ளணி வளைநாஞ்சிலவை
          சலம்புரி தண்டேந்தினவை
          வலம்புரி வயநேமியவை


     60.   வரிசிலை வயவம்பினவை
          புகரிணர்சூழ் வட்டத்தவை புகர்வாளவை
          எனவாங்கு,
          நலம்புரீஇ யஞ்சீர் நாம வாய்மொழி
          இதுவென வுரைத்தலினெ முள்ளமர்ந் திசைத்திறை


     65.   இருங்குன்றத் தடியுறை யியைகெனப்
          பெரும்பெய ரிருவரைப் பரவுதுந் தொழுதே.


கடவுள் வாழ்த்து


          இளம்பெருவழுதியார் பாட்டு.
          மருத்துவன் நல்லச்சுதனார் இசை.
          பண் நோதிறம்.

______________________________________________________

      இவ்வளவும் குன்றத்தையேத்திக் கண்டார்க்கும் அதன் சிறப்புக் கூறி மேல் அதன்கண் நின்ற இருவரையும் வாழ்த்தி வேண்டிக் கொள்கின்றார்:


    57. கூர்மையணிந்த வளைநாஞ்சிலையுடையை.


    58. கோபமிக்க தண்டினையேந்தினை.


    59. வலம்புரியொடு வெற்றி நேமியையுடையை.


    60. வரிசிலையோடு வெற்றி அம்பினையுடையை.


    61. புகரொழுங்கு சூழ்ந்த பாராவளையினையுடையை.
      இவ்வாழ்த்துக்களுள், ஒள்ளொளியவை, ஒரு குழையவை, (55) வள்ளணி வளைநாஞ்சிலவை, (57) சலம்புரி தண்டேந்தினவை, (58) என வந்தன
பலதேவன்; ஏனைய வாசுதேவன்.


    63-6. அழகிய சீரையும் அஞ்சப்படுதலையுமுடைய வேதம் தனக்கு
நன்மையை விரும்பி அவர் பெருமை ஈதென்று சொல்லுதலால், யாமும் உள்ளம்
மேவி அச்சொற்களுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்தேமாய்ப்
பெரும்புகழையுடைய இருவரையும் தொழுது வேண்டுதும், ‘எமக்கு
இவ்விருங்குன்றத்து அடியின்கண் உறைதல் எய்துக என்று,’ என்றவாறு.