ச
|
310 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
சிலப்பதிகாரம்
மதுரைக்காண்டம்
11. காடு காண் காதை
திருமால்
குன்றத்துச் செல்குவி ராயின்,
பெருமால் கெடுக்கும்
பிலமுண்டு; ஆங்கு
விண்ணோ ரேத்தும்
வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம்
பவகா ரணியொ
95. டிட்ட சித்தி
யெனும்பெயர் போகி
விட்டு நீங்கா
விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின்
மூன்றுள; ஆங்குப்
புண்ணிய
சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர்
கோமான் விழுநூ லெய்துவிர்;
100. பவகா ரணிபடிந்
தாடுவி ராயின்,
பவகா ரணத்திற்
பழம்பிறப் பெய்துவிர்;
______________________________________________________
‘திருமால்
குன்றத்துச் செல்லக்கடவீராயின், அவ்விடத்தே மிக்க
மயக்கத்தைக் கெடுக்கும் பிலத்து நெறியுண்டு’ என்றான்
என்க.
திருமால் குன்றம் - அழகர் திருமலை.
92. ஆங்கு - அப்பிலத்துக்குள்ளே.
93-7. விண்ணோரேத்தும்
மூன்றுள.
‘தேவர்களாலேத்தப்படுதலின்,
யாவரும் வியக்கத்தகும் மரபினையுடைய
‘புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி’ என்னும்
பெயர் எங்கும்
பரக்கப்பட்டு இடையறாத சிறப்பினையுடையவாய்த்
தம்மிற் சேர்ந்திருக்கின்ற
மூன்று பொய்கைகள் உள’ என்றான் என்க.
97. ஆங்கு - அவற்றுள்.
98-9. புண்ணிய
சரவணம்
எய்துவிர்.
‘புண்ணிய சரவணமென்னாநின்ற
பொய்கையில் ஆடுவிராயின்,
இந்திரனாற்செய்யப்பட்ட ஐந்திரவியாகரணமென்னும்
இலக்கணத்தை உணர்வீர்,’
என்றானென்க.
இது நினைவின்றிப் பெறும் பேறு.
பொருந்துதல் -
ஆடுதல். எய்துதல் - உணர்தல்.
100-101. பவகாரணி
. . . . . . . . . . . எய்துவிர்.
‘அதுவன்றிப் பவகாரணியென்னும்
பொய்கைக்கண் ஆடுவீராயின்,
இப்பிறப்பிற்குக் காரணமாகிய பழம்பிறப்பையுணர்வீர்’
என்றானென்க.
|