பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

இத

முதல் திருவாய்மொழி - பா. 11

31

இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி, நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட, ‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி, இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக்காட்டினார்.      

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        வாயும் திருமால் மறையநிற்க ஆற்றாமை
        போய்விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
        அறியா தவற்றே டணைந்தழுத மாறன்
        செறிவாரை நோக்கும் திணிந்து.

(11)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.