பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

312

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

  

           ‘இம்மைக் கின்பமு மறுமைக் கின்பமும்
           இம்மையு மறுமையு மிரண்டு மின்றியோர்
           செம்மையி னிற்பதுஞ் செப்புமி னீயிரிவ்

      115.  வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்
   
            உரைத்தார்க் குரியே னுரைத்தீ ராயின்
    
          திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்
______________________________________________________

கண்ணதாகிய விளக்கத்தையுடைய முகைகள் அவிழ்ந்த மலரையுடையதோர்
கோங்கின் நிழற்கண்ணே ஒரு பொற்கொடி போலவும் மின் போலவும் புயல்
போலவும் ஐவகைக் கூந்தலையும் வளைந்த தொடி புனைந்த
தோளினையுமுடையாளொருத்தி தோன்றி’ என்க.
 

     சிலம்பாறு - அவ்வியாற்றின் பெயர், தலை - இடம், இன் - உவமவுருபு,
கன்னிகாரம் - கொங்கு, தொடி - வளைவு, ஒருத்தி -ஓர் இயக்கி.


     112-7. இம்மைக் கின்பமும்
. கதவெனும்.
 

     ‘அங்ஙனம் தோன்றினவள், ‘இப்பிறப்பிற்கு இன்பமும் மறுபிறப்பிற்கு
இன்பமும் இவையிரண்டு மொழிந்து எக்காலத்தும் ஒன்றாந் தன்மையாய்க்
கோட்டமின்றி அழிவற நிற்கும் இன்பமுமாகிய பொருள்கள் யாவை? அவற்றை
நீயிர் உரைமின்; யான் 1இத்தாள் வரைக் கண்ணே வாழ்வேன்;
வரோத்தமையென்று கூறப்படுவேன்; யான் வினாய இவற்றை உரைத்தார்
உளராயின், அவர்க்கு எத்தொழிற்குமுரியேன்; ஆதலின், திருத்தக்கீர்!
உரைத்தீராயின், உமக்கு இப்பொழுதே இப்பிலவாயிற்கதவம் திறந்து தருவேன்
என்று சொல்லும்’ என்றான் என்க.
 

     இம்மைக் கின்பம் - புகழ், மறுமைக் கின்பம் - புண்ணியம், செம்மையில்
நிற்பது - மோக்கம். இனி, ஒருவர்க்கு இம்மை மறுமைகட்கு இன்பத்தைத் தந்து
பூமியுள்ளளவும் நிற்பது புகழெனலுமாம்; 2‘ஒன்றாவுலகத
தொன்றில்’ எனவும்,
3
‘இவணிசை யுடையோர்க் கல்லதவண, துயர்நிலை யுலகத் துறையு ளின்மை,
விளங்கக் கேட்ட மாறுகொல்’ எனவுங் கூறினாராகலின். ‘கதவந்
திறத்தற்குரியேன்’ எனவுமாம். திறந்தேன் - காலமயக்கம்; விரைபொருட்கண்
வந்தது.

______________________________________________________

1. அடிமலையைப் ‘பாதசைலம்’ எகன்று வடநூலார் கூறுதலின், தாள் வரை என்றார்.

2. திருக். 233.

3.
 புறநா. 50.