பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

கதவந

சிலப்பதிகாரம்

313

 

       கதவந்  திறந்தவள் காட்டிய நன்னெறிப்
             புதவம் பலவுள போகிடை கழியன


   
     120.  வொட்டுப் புதவமொன் றுண்டத னும்பர்
             வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி,
             ‘இறுதியி லின்ப மெனக்கீங் குரைத்தாற்
             பெறுதிர் போலுநீர் பேணிய பொருள்’ எனும்;
             ‘உரையீ ராயினு முறுகண் செய்யேன்


   
     125.  நெடுவழிப் புறத்து நீக்குவ னும்’எனும்;
             உரைத்தா ருளரெனி னுரைத்த மூன்றின்
          கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்;

______________________________________________________

 

     118-23. கதவந் திறந்தவள் பேணிய பொருளெனும்.
 

      ‘அவருரைப்பின், அவள் கதவைத் திறந்து இதுவென்று காட்டிய நல்ல
வழியில் நீண்ட இடைகழி வாயில்கள் பல உள; அவை கழிந்தால், இரட்டைக்
கதவையுடைய வாயிலொன்று உண்டு; அதற்கு மேலாகச் சென்றால்
வட்டிகையிலே எழுதின பாவை போல்வாளொருத்தி வெளிப்பட்டு, ‘ஈறில்லாத
இன்பம் யாது? அதனை உரைத்தீராயின் நீயிர் இம் முப்பொருளிலும் விரும்பிய
பொருளைப் பெறுவீர்’ என்னும் என்றாளென்க.
   

    புதவம் - வாயில், போகு - நெடுமை, ஒட்டுப்புதவம் - இரட்டைக் கதவம்,
உம்பர் - மேல், பூங்கொடி-உவமப்பெயர்; அன்றித் ‘துவார
வட்டிகையிற்பூங்கொடி அங்ஙனம் கேட்கும்’ எனவுமாம். இறுதியில் இன்பம் -
வீடு. பெறுதிர்- முன்னிலைப் பன்மை. போலி - ஒப்பில் போலி.


    124-5. உரையீராயினும்  நீக்குவன நும்மெனும்.
 

    வினாயவள், ‘யான் வினாயதனை நும் பேதைமையான் உரையீராயினும் நும்மை
லருத்தஞ்செய்யேன்; நீர் போகக் கடவ நெடுநெறிக் கண்ணே நும்மைப்
போக்குவன்’ என்னும் என்றான் என்க.


    126-7. உரைத்தாருளர் பெயரும்.
   

    ‘அவள் அங்ஙனங் கேட்ட பொருளை உரைத்தாருளராயின், முற்கூறப்பட்ட
பொய்கை மூன்றின் கரைக்கட்செலுத்தி அவை இவையென்று காட்டி மீளும்,’
என்றானென்க.
   

    ஆங்கு -அசை.