பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
107

ஞர

ஞர்கள் ஏத்துதலேயன்றி, அவர்களில் சிலர் நெஞ்சிலே துவேஷமுங்கிடக்க ஏத்துதலேயன்றி, இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.

    முதற்பாட்டில், திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் எல்லா நிலைகளிலும் எத்தகைய அடிமைகளும் செய்யவேணும் என்று விரும்பினார்; இரண்டாம் பாட்டில், ‘அது ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதன்றோ?’ என்ன, ‘அங்குள்ளாரும் இங்கே வந்து அடிமை செய்கிற தேசமன்றோ? நமக்கு இங்கே பெறத் தட்டில்லை,’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘நிறைவாளர்க்குத் தன்னைக் கொடுத்தவன் குறைவாளர்க்குத் தன்னைச் தரச்சொல்ல வேண்டுமோ?’ என்றார்; நான்காம் பாட்டில், ‘அவர்களுக்குத் தன்னைக் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ, எனக்குங்கூடத் தன்னைத் தந்தவனுக்கு?’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘எனக்குத் தன்னைத் தந்தான் என்றது ஓரேற்றமோ, என்னிலும் தண்ணியாரைத் தேடிக் கிடையாமல் நிற்கிறவனுக்கு?’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘இவ்வடிமையிலே இழிய, விரோதிகளும் தன்னடையே போம்’ என்றார் ஏழாம் பாட்டில், ‘இக்கைங்கரியத்தைத் திருமலையாழ்வார் தாமே நமக்குத் தருவர்,’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘அத்திருமலையாழ்வார் தாமே நம் விரோதிகளைப் போக்கித் தம்மையும் தருவர்,’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘திருமலையாழ்வார் எல்லாம் வேண்டுமோ நமக்குப் பேற்றினைத் தருகைக்கு? அவருடைய சம்பந்தமுடையார் அமையும்,’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘சேஷிக்கு உத்தேஸ்யமாகையாலே அடியர் ஆனார் எல்லாரும் திருமலையாழ்வாரை அடைமின்,’ என்றார்; முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு - எழுசிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்கநலம் சேர்மாறன்
பூங்கழலை நெஞ்சே! புகழ்.

(23)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.