இ
இருத்தலின், ‘மாரி
மாறாத தண் அம் மலை’ என்கிறது. வாரி மாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர் நகர் - அழகியதாய்க்
காட்சிக்கு இனியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திரு நகரி. திருநகரிக்கு 1ஸஹ்யம்
திருமலையாகையாலே, திருமலை மாரி மாறாதாப் போலே திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின்,
‘வாரி மாறாத நகர்’ என்கிறது.
காரி மாறன் சடகோபன்
சொல் ஆயிரத்து இப்பத்தால் ‑ 2சொன்ன பொருளில் அதிசங்கை பண்ணாமைக்கு ஆப்தி
அதிசயம் சொல்லுகிறது. வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்கும் - ‘இத்திருவாய்மொழி
கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது. 3திருமலை மாரி
மாறாதாகையாலே, திருநகரி வாரி மாறாது; ஆறாக் கயமாகையாலே பிராட்டியுடைய ஆசனமாகிய தாமரை வேரி
மாறாது.
‘இது கற்றார்க்கு
இவள் பலம் கொடுக்க வேண்டுவான் என்?’ என்னில், தனக்கு முன்பே தான் காட்டிக்கொடுத்த சமுசாரியை
விரும்பும் சீல குணத்தையாயிற்று இதில் சொல்லிற்று; இந்தச் சீல குணம் ஒருவர்க்கும் நிலம் அன்று;
தான் அறிதல் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் அறிதல், செய்யும் இத்தனையாயிற்று; ‘இந்தப்
பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் கருணையின் மிகுதியாலே, சர்வேசுவரன் பலம்
கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி, ‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே
பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, 4பலம் கொடுக்கும். இத்திருவாய்மொழி கற்றாருடைய,
பகவானுடைய அனுபவத்திற்கு விரோதியான
_____________________________________________________
1. ஸஹ்யம் - பிரவாஹத்துக்கு
மூலமான மலை.
2. திருக்காரியாரையிட்டு
நிரூபித்ததற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘சொன்ன
பொருளில்’ என்று தொடங்கி. ஆப்தி - உண்மையுரைத்தல்.
அதிசயம் -
மிகுதி.
3. ரசோக்தியாக
அருளிச்செய்கிறார், ‘திருமலை’ என்று தொடங்கி. ஆறாக்கயம்
- தண்ணீர் வற்றாத குளம்.
4. ‘வினைதீர்க்கும்’
என்பதற்குப் ‘பலம் கொடுக்கும்’ என்று பொருள்
அருளிச்செய்யக் காரணம், தடைகள் நீங்கினால்
விரைவில் பலம்
சித்திக்குமாதலின், அதனைத் திருவுள்ளம் பற்றி என்க.
|