| New Page 1 
‘எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை 
உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய். 
விபலம் மம இதம் - தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது 
போலே?’ என்னில், மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ - 1‘நான் என்னை மனிதனாகவே 
நினைக்கிறேன்,’ என்றவர்க்கும் உண்டே அன்றோ மனிதத் தன்மை? அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த 
காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது, ‘தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ 
என்னில், மம இதம் - ‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் 
பிராட்டி. 
    நும் இச்சை 
சொல்லி - உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும் 
இவளைப் பார்த்தாலும் வேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ? இனி உள்ளது 
உங்களுக்குத் தோற்றிய வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ?’ என்றபடி. நும் தோள் குலைக்கப்படும் 
அன்னைமீர் - 2துர்விருத்தர் செய்வதை 
விருத்தவான்கள் செய்வர்களோ? 3‘தோள் 
அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது? ஆதலால், 4நீங்கள் 
இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்ன, 
மன்னப்படு மறைவாணனை - நித்தியமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை; 
மன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே, 
வஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே 
பின்னே பின்னே உச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி. 
    அன்றிக்கே ‘மன்னுகையாவது, 
பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும் வேதங்களால் 
_____________________________________________________ 
1. ஸ்ரீ ராமா. 
யுத். 120 : 11.  
2. ‘துர்விருத்தர் 
செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ?’ என்றதற்கு,‘பகவத் சம்பந்தமில்லாதார் செய்வதனைப் 
பகவத் சம்பந்தமுடையவர்கள்
 செய்வர்களோ?’ என்பது கருத்து.
 
3. முதல் திருவந். 
63. 
4. 
‘நீங்கள்’ என்றது, ‘அவனுக்கே அடிமைப்பட்டிருக்கிற நீங்கள்’ என்றபடி. |