New Page 1
‘இது ஒரு விஷயத்தில் பாவபந்தம்
அடியாக வந்த நோயாயிற்று; மற்று ஒன்றால் அன்று,’ என்று அவர்கள் செய்கின்றவற்றை விலக்குவது.
தொழுது அடிப்பாட வல்லார் - பெண்பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம்
‘இது கற்றார்க்கும் உண்டு’ என்று இருக்கிறார் ஆயிற்று இவர். துக்க சீலம் இலர்களே - மோஹித்தவிடத்து
வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும், பாகவத சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத்
துக்கமாவது. அஃது இல்லாமையே தன்மையாக உடையர் ஆவர். சீலம் - தன்மை.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
தீர்ப்பார் இலாதமயல்
தீரக் கலந்தமால்
ஓர்ப்பாது மின்றி
உடன்பிரிய - நேர்க்க
அறிவழிந்துஉற்
றாரும் அறக்கலங்கப் பேர்கேட்டு
அறிவுபெற்றான் மாறன்சீ
லம்.
(36)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|