பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
455

என

என்ன, ‘இந்த விஷ்ணு எவன்?’ என்பது போன்ற விருப்பு இல்லாத வார்த்தைகள் சிலவற்றைப் பேச, ‘எனது தலையை அறுப்பதைக்காட்டிலும் பெரிது இந்த வார்த்தை!’ என்கிறபடியே, ‘என் தலையையறுத்து என் கையிலே தந்தாயாகில், ‘என் பேரன் செய்த உபகாரம்’ என்று இருப்பேன் யான்; என் முன்பே பகவானை நிந்தை செய்தாய். நீ ராஜ்யப்பிரஷ்டனாவாய்!’ என்று சபித்துவிட்டான்; இதனை இப்படியே பட்டர் அருளிச்செய்தவாறே, ‘பிரகிருதி புருஷ விவேகம் பண்ணியிருக்கிற இவன் ஆத்துமாவுக்குக் குறைவு வருவது ஒன்றதனைச் சபியாமல், ‘ராஜ்யத்திலிருந்து நழுவினவனாய் விழுவாயாக’ என்று சபிப்பான் என்?’ என்று கேட்க, ‘நாயைத் தண்டிக்கையாவது, மலத்தை விலக்குகையேயன்றோ? சாந்தை விலக்குகை அதற்கு விருப்பம் இல்லாதது அன்றே? ஆகையால், இவனுக்கு அநிஷ்டம் செய்கையாவது இதுவேயன்றோ?’ என்று அருளிச் செய்தார்.

(பக். 418)

    ஒருவன் பகவானைத் தியானம் செய்து கொண்டிருக்கச் செய்தே, ‘இவன் சமாதியில் நின்ற நிலை அறியவேணும்’ என்று பார்த்துச் சர்வேசுவரன் இந்திரன் வேடத்தை மேற்கொண்டு ஐராவதத்திலே ஏறி வந்து முன்னே நின்று, ‘உனக்கு வேண்டுவது என்?’ என்ன, ‘ஒரு புழுவும் தானுமாய் வந்து நிற்கிறவன் யார்?’ என்றான்; ‘சர்வேசுவரன் பெரிய திருவடியை மேற்கொண்டு வந்தான்,’ என்னுமிடம் அறியானேயன்றோ. கொண்டு வந்த வேடம் இதுவாகையாலே? வந்தவனைப் பார்த்து, ‘நீ யாவன் ஒருவனை ஆஸ்ரயித்து இந்தச் செல்வம் முழுதும் பெற்றாய்? அப்படிப்பட்டவனைக்காண் நான் ஆஸ்ரயிக்கிறது; இப்படி வழியிலே போவார்க்கெல்லாம் பச்சையிட்டுத் திரியுமவன் அல்லேன் காண்; இப்போது முகங்காட்டாதே போக வல்லையே பிரானே! உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றானேயன்றோ?’

(பக். 431)

    பகவானிடத்தில் சரணாகதி செய்து ஞானாதிகராயிருப்பார் ஒருவர் இருந்து தம்முடைய வஸ்திரத்தைப் புரையா நின்றாராய், அவ்வளவிலே தேவியும் தேவனுமாகப் போகா நிற்க, இவர் அநாதரித்திருந்தாராய், தேவியானவள், ‘நீர் சர்வாதிகராய் இருக்க, உம்மைக் கண்ட இடத்தில் இவன் அநாதரித்துக் காலை நீட்டிக்கொண்டிருந்தானே!’ என்ன, தேவனும், ‘பகவத் பக்தன் போலேகாண்’ என்ன ‘தேவியும்,