பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
216

New Page 1

“எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல், தூய ஆயிரத்து இப்பத்தால் துவள் இன்றிப் பத்தர் ஆவர் - இப்பத்தினையும் கற்றவர்கள் ஆழ்வாரைப் போலே ஆவர். இப்பத்தினையுடைத்தாகையாலே தூய்மையையுடைத்தான ஆயிரம் என்னுதல்; அன்றிக்கே, ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே தூய்மையையுடைத்தான இப்பத்து என்னுதல். துவள் இன்றியே பத்தர் ஆவர் - துவள் - குற்றம். குற்றம் இல்லாமையாவது, வேறு அவதாரங்களில் போகாமல் கிருஷ்ணனுடைய செயல்களிலே தாழ்தல்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி 

        குரவைமுத லாம்கண்ணன் கோலச் செயல்கள்
        இரவுபகல் என்னாமல் என்றும் - பரவுமனம்
        பெற்றேன்என் றேகளித்துப் பேசும் பராங்குசன்தன்
        சொற்றேனில் நெஞ்சே! துவள்.

(54)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.