பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அழக

154

திருவாய்மொழி - ஏழாம் பத்து

அழகிலே இவர் அகப்பட்ட படியைத் தெரிவித்தபடி. 1அல்லாத அழகுகள் ஒருபடியும் இது ஒரு படியுமாய் இருக்கை; 2இது கை மேலே அனுபவித்துக் காணலாமே. 3அவர் அடிமைத் திறத்து ஆழியாரே - அடிமைக் கூட்டத்தில் திருவாழியின் தன்மையையுடையவர் என்னுதல்; அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட்புகுவர் என்னுதல்.

(11 )

    திருவாய்மொழி நூற்றந்தாதி

    வெள்ளியநா மங்கேட்டு விட்டகன்ற பின்மோகம்
    தெள்ளியமால் தென்திருப்பேர் சென்றுபுக - உள்ளமங்கே
    பற்றிநின்ற தன்மை பகருஞ் சடகோபற்கு
    அற்றவர்களை தாமாழி யார்

(63)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

__________________________________________________________________

1. ‘தாமரைக் கண்ணன்’ என்றும், ‘செங்கனிவாய்’ என்றும், செஞ்சுடர் நீண்முடி’
  என்றும் சொல்லப்பட்டனவே?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘அல்லாத’ என்று தொடங்கி. ஒரு படியும்-ஒரு தட்டும்.

2. ‘அது எப்படி?’ என்ன, ‘இது கைமேலே’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.

3. ‘அடிமைத் திறத்து ஆழியாரே’ என்பதற்கு, இரு வகையாகப் பொருள்
  அருளிச்செய்கிறார். முதற்பொருளில், திறம் - கூட்டம்; ஆழியார்-திருவாழியின்
  தன்மையையுடையவர். இரண்டாவது பொருளில், திறம்-செயல்; ஆழியார் -
  ஆழ்ந்தவர்கள்.