பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 11

247

போலே ஒன்றே அறுதியிட்டுப் பிரிக்க ஒண்ணாதபடியாயிருக்கிற வேதார்த்தாமானது, எல்லாரும் படிக்கத்தகுந்ததாய் எல்லா ஐயங்களும் தீர்ந்து தெளிந்தது அவர் பக்கலிலே வந்தவாறே. இவை பத்தும் வல்லார் அவர் தெளிவுற்ற சிந்தையர்-இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், இவ்வாழ்வார்தம்மைப் போலே தெளிவுற்ற நெஞ்சினையுடையராவர். ‘அப்படித் தெளிவது தேச விசேடத்திலே போனாலோ?’ என்னில், பாமரு மூவுலகத்துள்ளே - ‘பாபம் நிறைந்திருக்கிற தேசத்திலே’ என்றபடி. 1அவ்வருகே ஒரு தேச விசேடத்தே போனால் பெறக்கடவே தெளிவை அதற்கு எதிர்த்தட்டான இங்கே இருந்தேயுடையராவர்; 2‘சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே தெளிவுற்ற சிந்தையர்: குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டான பரமாத்துமாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ்விபூதியிலே இருந்து வைத்தே சுத்த பாவராய் இருப்பர். பாபம் என்பது, ‘பா’ எனக் கடைக்குறைந்து நிற்கிறது.

(11)

        திருவாய்மொழி நூற்றந்தாதி

    கற்றோர் கருதும் விசயங் களுக்கெல்லாம்
    பற்றாம் விபவகுணப் பண்புகளை-உற்றுணர்ந்து [ சொல்
    மண்ணிலுள் ளோர் தம்மிழவை வாய்ந்துரைத்த மாறன்
    பண்ணிலினி தானதமிழ்ப் பா

(65)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

______________________________________________________________________

1. ‘மூவுலகத்துள்ளே’ என்ற ஏகாரத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ’அவ்வருகே’
  என்று தொடங்கி.

2. ‘’இங்கே இருந்தே’ என்கைக்கு, இவ்வுலகின் தன்மை யாது?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்,
  ‘குற்றங்களுக்கு’ என்று தொடங்கி,