பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

பக

ஆறாந்திருவாய்மொழி - பா. 11

285

பக்கலிலே செய்யாநிற்பார்கள் மதிமுகமடந்தையர். நெடுநாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப்பெறுவர்கள்.

(11)

             திருவாய்மொழி நூற்றந்தாதி 

        பாமரு வேதம் பகர்மால் குணங்களுடன்
        ஆமழகு வேண்டற்பா டாமவற்றைத்-தூமனத்தால்
        நாண்ணியவ னைக்காண நன்குருகிக் கூப்பிட்ட
        அண்ணலைநண் ணார்ஏ ழையர்

(66)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.