பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 11

381

இது. இன்பம் பயக்குமே - 1‘இந்த இறைவனே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்’ என்கிறபடியே, எப்பொழுதும் பகவானுடைய அனுபவத்தாற்பிறக்கும் ஆனந்தமானது உண்டாம்.

(11)

            திருவாய்மொழி நூற்றந்தாதி

        ‘என்றனைநீ இங்குவைத்தது ஏதுக்கு?’ எனமாலும்
        ‘என்றனக்கும் என்தமர்க்கும் இன்பமதா - நன்றுகவி
         பாட’ எனக் கைம்மா றிலாமைபகர் மாறன்
         பாடணைவார்க்கு உண்டாம்இன் பம்.

(69)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

__________________________________________________________________________

1. ‘ஏஷஹ்யேவ ஆநந்தயாதி’ என்பது, தைத். ஆன.