1இன
பத்தாந்திருவாய்மொழி
- முன்னுரை |
383 |
1இனித்தான்
வேத வாக்கியங்களும் ‘தனது இயல்பான வடிவினை அடைகிறான்’ என்று சொரூபத்தின் அடைதல் அளவும்
சொல்லவே, அதற்கு அப்பால் கைங்கரியமானது அவகாத ஸ்வேதம் போலே தன்னடையே வரும் என்று ப்ரஹ்மத்தினை
அடைதல் அளவும் சொல்லிவிடும்.
2ஆழ்வார்கள்
‘வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்’ என்று அதுதன்னையே சொல்லாநிற்பார்கள்; 3அடைந்தன்
பலமான கைங்கரியத்தில் ருசியாலே. 4‘சம்சாரம் தியாஜ்யம்; சர்வேஸ்வரன் உத்தேசியன்’
என்கிற ஞானம் பிறந்து, பகவானை அடைந்தவர்கள், 5‘பகவானை அடைதல் (பிறவிப் பிணிக்கு)
மருந்து’ என்று பகவானை அடைதல் அளவிலே நின்றார்கள்; 6அவர்களைக்காட்டிலும்’ மயர்வற
மதிநலம் அருளினன்’ என்கிறபடியே, பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தையுடையரான இவர்களுக்கு
வாசி இதுவாயிற்று.
___________________________________________________________________
1. ‘நன்று; வேதங்களிலே
‘பகவானை அடைதலே புருஷார்த்தம்’ என்னாநிற்க,
கைங்கரியம் புருஷார்த்தம்’ என்பான் என்?’ என்ன,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இனித்தான்’ என்று தொடங்கி.
‘ஸவேந ரூபேண அபிநிஷ்பத்யதே’
என்பது, சுருதி. அவகாத ஸ்வேதம் -
நெல் முதலியவற்றைக் குற்றும் போது சரீரத்தில்
தோன்றும் வியர்வை.
2. ‘ஆயின், ஆழ்வார்களும், வேதம்
போன்று பிரஹ்மத்தினை அடைதல்
மாத்திரத்தைச் சொல்லிவிட ஒண்ணாதோ?’ என்ன,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஆழ்வார்கள்’ என்று தொடங்கி. ‘வழுவிலா’ என்பது,
திருவாய்.
3. 3 : 1. அதுதன்னையே - அந்தக்கைங்கரியத்தையே,
3. அப்படிச்
சொல்லுகைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘அடைந்ததன்’
என்று தொடங்கி.
4. ‘நன்று; வேதங்களின்
கருத்தை உபப்பிரும்ஹணம் மூலமாக வெளியிட்ட மஹரிஷிகள்
சொல்லாமைக்குக் காரணம் என்?’ என்ன,
‘சொரூபயாதாத்மிய ஞானம் இல்லாமையாலே’
என்கிறார், ‘சம்சாரம்’ என்று தொடங்கி.
5. ‘பேஷஜம் பகவத்
ப்ராப்தி:’ என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 59.
6. ‘அவர்களைக்காட்டிலும்
இவர்களுக்கு வாசி யாது?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அவர்களைக்காட்டிலும்’ என்று
தொடங்கி. ‘இதுவாயிற்று’ என்றது,
‘கைங்கரியத்தில் ருசியுடையராகை ஆயிற்று’ என்றபடி.
|