பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அவன

428

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    அவன் தான் அவதரித்துச் சோகிப்பது மோகிப்பதனாற்போலே. பக். 30.

    மஹாராஜர் வாலியை வென்றாற்போலே. பக். 31.

    இராசபுத்திரன் தலையில் முடியை வாங்கிச் சும்மாட்டைக் கொண்டு வழியிலே நின்றால், அடி அறியாதார் சுமை எடுத்துக் கொண்டு போமாறு போலே, பக். 41.

    வலி இல்லாதான் ஒருவன் தலையிலே மிக்க பாரத்தைச் சுமத்திச் சுற்றும் நின்று தந்தாம் வழியே இழுத்துக்கொண்டு போகத் தேடுமாறு போலே. பக். 42.

    தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே. பக். 45.

    குழந்தைகளைப் பட்டினி இட்டு வைத்தும் வந்த விருந்தினரைப் பேணுவாரைப் போலே. பக். 48.

    ‘பிள்ளாய்! நீ நிர்பந்திக்கக் கடவை அல்லை; உன்னைச் சுவதந்திரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே, உன் சொரூபத்திற்குத் தகுதியான பாரதந்திரயத்தைப் பெற்று நீ போ’ என்று சொன்னாற்போலே. பக். 49.

    கிண்ணகம் பெருகி ஓடாநின்றால் இரு கரையும் ஆறுகளாகப் பெருகிப் போகாநிற்கச்செய்தேயும் கடலிற்புகும் பாகம் குறையாமல் போய்ப் புகுமாறு போலே. பக். 51.

    பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளைய பெருமாள் உணர்ந்திருக்குமாறு போலே. பக். 51.

    சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தாரைப் போலே. பக். 55.

    விடாயன் கையை மடுத்துத் தண்ணீரை வேண்டுமாறு போலே. பக். 57.

    இராக்கதர்கள் தின்ற உடம்பைக் காட்டினாற்போலே. பக். 59.

    ஒலி வழியே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோன்றினாற் போலே. பக். 66.

    ஒரு நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே. பக். 69.

   
அவியும் விளக்குக் கிளர்ந்து எரியுமாறு போலே. பக். 72.