பக்கம் எண் :

39

கூறினாராம். தம்மை மறந்த நிலையில் எம்பெருமானிடம் ஈடுபட்டிருந்த
திருப்பாணரின் செவிகளில் கையொலி சத்தம் கேட்க வில்லை. தன்
நிலையினின்றும் பிறழாது மனமுருகி பாடிக் கொண்டேயிருந்தார்.
இதைக்கண்ட லோகசாரங்கர் ஒருசிறு கல்லை எடுத்து பாணர் மீது வீசவே
அது அவர் நெற்றியில் பட்டு இரத்தம் பீறிட்டது. நிலையுணர்ந்த பாணர்
நடுநடுங்கி ஒதுங்கி நின்று லோக சாரங்கருக்கு வழிவிடுத்தார். லோகசாரங்கர்
தீர்த்தம் முகர்ந்துகொண்டு திருவரங்கப்பன் முன் வந்து நின்றார். என்ன
ஆச்சர்யம் திருவரங்கனின் நெற்றியினின்றும் இரத்தம் வழிந்து கொண்டு தான்
இருந்தது. செய்வதறியாது திகைத்து அனைவரும் கூடி இந்த ஆச்சர்யத்தை
கண்ணுற்று வகையறியாது நின்றனர். மனம் நொந்து மயங்கிய நிலையில்
துயில்கொண்ட லோகசாரங்கர் கனவில் வந்த அரங்கன் பாணரைத்
துன்புறுத்தியது தவறென்றும், நும் போன்றே அவரும் தொண்டரன்றோ, நீர்
சென்று உம் தோள் மீது அவரைச் சுமந்து வாரும் என்று பணித்தார்.
மறுநாள் காலையில் லோகசாரங்க முனிவரும், மற்றையோர்களும்
தென்திருக்காவேரி செல்ல தம்மை மறந்து எம்பெருமான் மீது மையல்கொண்டு
பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்த திருப்பாணரை வணங்கி, அவரிடம்
பெருமாளின் திருவுளக்குறிப்பை தெரிவித்து தம்தோள் மீது ஏற்றிக்
கொணர்ந்து திருவரங்கர் முன் விடுத்தனர். திருவரங்கநாதனைக் கண்குளிரக்
கண்ட திருப்பாணாழ்வார் அவரது திருமுகம், கண், வாய், செவி, திருவுந்திக்
கமலம், ஆகியவற்றின் பேரழகில் மயங்கி அமலனாதிப்பிரான்
எனத்தொடங்கும் 10 பாசுரங்களை வழங்கி திருவரங்கன் திருவடிக்கீழ் புகுந்து
மறைந்தார். எம்பெருமானின் அடியார்கள் எக்குலத்தவராயினும் சமமே என்று
பறைசாற்றும் சாதி சமய பேதமற்ற வைணவம் திருவரங்கத்திலே காலூன்றி
எத்திக்கும் பரவ இவ்வரங்கனே வித்திட்டார்.

     12) தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கத்திற்கு அருகாமையில்
ஒரு நந்தவனம் அமைத்து தினந்தோறும் திருவரங்க நாதனுக்கு பூமாலையும்
பாமாலையும் சமர்ப்பித்து வந்தார். திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு
மதில்கட்டும் சமயம் தொண்டரடிப்பொடியாழ்வாரின் நந்தவனம் குறுக்கிட்டது.
எனவே நந்தவனத்தை