பக்கம் எண் :

41

     இவர்களுடன் மற்றைய ஆழ்வார்களும் மங்களாசாசனப் பூக்களைச்
சூட்டி மகிழ்கின்றனர். என்னே ஆழ்வார்கட்கும் அரங்கனுக்கும் உள்ள
தொடர்பு.

     14) அரையர் சேவை என்பது நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை ராக
தாளத்தோடு இன்னிசையாய் இசைப்பது. மார்கழி மாதத்து வைகுண்ட
ஏகாதசியின் போது இங்கு அரையர் சேவை நடப்பது செவிகட்கு மட்டுமன்றி
கண்களுக்கும் அருவிருந்து. ஒரு சில திவ்யதேசங்களில் மட்டுமே இந்த
அரையர் சேவை இன்று வழக்கிலிருந்தாலும் திருவரங்கத்து அரையர்
சேவையே மிகச் சிறப்பானதாகும்.

     15) இத்தலத்திற்குரிய நிலங்களைக் குத்தகைக்குவிட்டு அதிலிருந்து
அறுவடை செய்து வந்த நெற்கதிர்களை ஆண்டுதோறும் சித்திரைமாதத்தன்று
யானை மீது ஏற்றி வெள்ளைப் பிள்ளை என்பார் கொண்டு வந்து பெருமாள்
திருவீதி எழும்போது அவர்க்கெதிரே சமர்ப்பிப்பார். ஆண்டுதோறும்
நடைபெறும் இந்நிகழ்ச்சி கதிர் அலங்காரம் என்ற பெயரில் விசேடமாகக்
கொண்டாடப்படுகிறது.

     16) திருவரங்கனின் கட்டளைப்படி ஆழ்வார் திருநகரியிலிருந்து
நம்மாழ்வாரை, மதுரகவியாழ்வார் இங்கு கொணர்ந்து சேர்த்தார். நம்மாழ்வார்
இங்கு வந்து எழுந்தருளியுள்ள இடம் இன்றும் ஒரு சந்தியா மடம் போல்
காட்சி தருகிறது. வைகுண்ட ஏகாதசியின்போது 7வது திருநாளன்று
நம்மாழ்வாருக்கு எதிரில் வந்து பெருமாள் சேவை தருவார். அர்ச்சகர்கள்
தங்கள் கரங்களாலேயே பெருமாளை எழுந்தருளச் செய்யும் இந்நிகழ்ச்சி
“திருக்கைத்தல சேவை” என்னும் பெயரால் நடைபெற்று வருகிறது. வைகுண்ட
ஏகாதசியன்று இங்கு சொர்க்க வாசல் திறப்பது மிகச் சிறப்பான விழாவாகும்.
இந்த பரமபத வாசலில் விரஜா நதி ஓடுவதாக ஐதீஹம்.

     17) திருவரங்கனை நேராகக் கை கூப்பி வணங்கிய வண்ணம் உள்ள
மிகப் பெரிய கருடன் இங்கிருப்பதைப் போல் பிரம் மாண்டமான வடிவில்
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லையென்று சொல்லலாம். இந்தக்
கருடாழ்வாரின் சன்னதி வாயிலை சுக்ரீவனும், அங்கதனும் காவல் புரிவதாக
ஐதீஹம். பாண்டிய மன்னன் சுந்தரவர்மன் காலத்தில் இது கட்டப்பட்டதாக
இருக்கலாமென்று