| காப்பு என்று பெயர். இத்திருச்சுற்றில் எட்டுக் கரங்களுடன் கூடின வரப்பிரசாதியான சக்கரத்தாழ்வார் சன்னதி, பேரழகு பொலியத் தோன்றும் வேணுகோபால கிருஷ்ணர் சன்னதி போன்றனவும் உண்டு. ஸ்ரீரங்க விலாச மண்டபம் என்று ஒரு மண்டபமும், வைகாசித் திருவிழா நடைபெறும் வஸந்த மண்டபமும் தாயார் சன்னதியும் இதில்தான் உள்ளது. தாயார் சன்னதிக்கு எதிரில்தான் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய கம்பர் மண்டபம் உள்ளது. இங்குள்ள மாடக்கோயிலில்தான் மேட்டழகிய சிங்கர் எனப்படும் நரசிங்கப் பெருமாள் சன்னிதியும் உள்ளது. ஆயிரங்கால் மண்டபமும் இதில்தான் உள்ளது. இதன் நடுவே உள்ள திருமாமணி மண்டபத்தில்தான் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று தொடங்கும் திருவாய்மொழித்திருநாள் உற்சவம் நடைபெறும். அவ்வமயம் திருவாய் மொழி சேவிப்பதும், அரையர் சேவையும் தெய்வீகமான நிகழ்ச்சிகளாகும். இராமானுஜரின் திருமேனி வைக்கப்பட்டுள்ள கோவிலும் இந்த சுற்றுக்குள்தான் உள்ளது. தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் ஆகியோருக்கும் கூரத்தாழ்வாருக்கும் பிள்ளை லோகாச்சார்யாருக்கும் இதில்தான் சன்னிதிகள் உள்ளது. 4வது திருமதில் மஹர்லோகம் எனப்படும் 4வது திருச்சுற்றுக்கு திருமங்கை மன்னன் சுற்று, ஆலிநாடான் வீதி என்றும் பெயர். இம்மதில் திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்டது. இதன் நுழைவாயிலுக்கு கார்த்திகை கோபுர வாசல் என்று பெயர். இதில்தான் பிரம்மாண்டமான கருடாழ்வார் சன்னிதி உள்ளது. இதற்கெதிரே உள்ள பரமன் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் மிக்க கலை நுணுக்கம் வாய்ந்தவை. இதில் முதலாழ்வார்கள் மூவரின் சன்னிதி, நம்மாழ்வார் சன்னிதி, திருமழிசையாழ்வார் சன்னதி, திருக்கச்சி நம்பிகள் சன்னிதி போன்றனவும் உண்டு. மிகச்சிறந்த சந்திர புஷக்ரணியும் இதில் தான் உள்ளது. பிரசாதம் விற்கும் இடமும் இங்குதான். சொர்க்க வாசல் என்பதும் இதில் தான். வேறெங்கும் காண்டற்கரிய மருத்துவப் பெருமாளான தன்வந்திரி சன்னிதியும் இதில்தான் உள்ளது. 3வது திருமதில் ஜநோலோகம் எனப்படும் இந்த 3வது திருச்சுற்றுக்கு ஆர்யபடர்வாசல் என்று பெயர். முன்பு ஒரு காலத்தில் ஆர்யர் என்னும் வடநாட்டு அந்தணர்கள் இவ்வாசலைக் காவல்புரிந்து வந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. இதற்கு குலசேகரன் திருச்சுற்று |