| கி.பி.1268-1308 மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலம். இவன் காலத்தில் இந்தியா வந்த போர்ச்சுக்கீசிய மாலுமி மார்க்கோபோலோ இங்கு வந்து இத்தலம்பற்றியும் இதைச் சுற்றியுள்ள செழிப்பைப் பற்றியும் வியந்து போற்றிக் குறிப்புகள் கொடுத்துள்ளார். கி.பி. 1311 முஸ்லீம் தளபதி மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான். இக்கோவிலில் கொள்ளையிட்டான். கி.பி.1325-1351 முகம்மதுபின் துக்ளக் இக்கோவிலை கொள்ளையிட எத்தனித்தான். அரங்கன்பால் பற்றுக் கொண்ட அடியார்களும், ஆச்சார்யார்களும் திருவரங்க நகர்வாசிகளும் தேவதாசிகளும் அவனை முன்னேறவிடாமல் தடுத்தனர். எண்ணற்ற வீரர்கள் இருதரப்பிலும் மாண்டனர். பாண்டியர்களும்., ஒய்சாளர்களும் முடக்கப்பட்டதாலும் சோழவரசு இந்திய வரைபடத்தில் கொஞ்சம் கூட இடம்பிடிக்க முடியாது இருந்த இந்த காலக்கட்டத்தில் வைணவ அடியார்கள் தம் இன்னுயிர் நீத்து இத்திருக்கோவிலைக் காத்தனர். இத்திருக்கோவிலின் விலை உயர்ந்த அணிகலன்களையும், வழிபாட்டிற்குரிய முக்கிய பொருட்களையும் உற்சவப் பெருமாளையும் திருவரங்கத் தினின்றும் கடத்தி பல ஊர்களில் மறைத்து வைத்து திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை எனப் பலவிடங்களிலும் மறைத்து இறுதியில் திருப்பதியில் கொண்டுபோய் பாதுகாத்து வைத்தனர். கி.பி. 1371 வரை திருப்பதியிலேயே இருந்தன. இவ்விதம் திருவரங்கத்திலிருந்து கிளம்பி மீண்டும் திருவரங்கம் வரும் வரையில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து மே. ஸ்ரீ வேணுகோபாலன் என்பார் எழுதியுள்ள “திருவரங்கன் உலா” என்னும் நூல் தெளிவாகவும் விரிவாகவும் வரலாற்று நாவல் போன்று சிலாகித்துப் பேசுகிறது. இந்நாவலில் வரும் குலசேகரன், |