பக்கம் எண் :

50

பிள்ளை லோகச்சார்யர் போன்றோரின் பணிகள் எந்நாளும் நினைவு
கூறத் தக்கதாகும்.

     கி.பி. 1371 விஜயநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு தோன்றிய
விஜயநகரப் பேரரசு முஸ்லீம்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து
இத்திருக்கோவிலை மீட்டு திருப்பதியிலிருந்து உற்சவப் பெருமாளையும்,
பிறபொருட்களையும் மீளக் கொணர்ந்து சற்றேறக் குறைய இன்றுள்ள
அளவிற்கு திருவரங்கம் சீர்படுத்தப்பட்டு பொலிவு பெற்றது. அன்று முதல்
விடுபட்டுப் போயிருந்த விழாக்களும். நிகழ்ச்சிகளும் தொடரத் தொடங்கின.
சில வைணவச் சொற்றொடர்களும் 15ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட
பெயர்களுடனே இன்றும் நின்று நிலவுகிறது. கி.பி.1565இல் தலைக்கோட்டை
யுத்தத்தில் விஜயநகர பேரரசு வீழ்ச்சி அடையும்வரை இத்திருக்கோவிலை
அவர்கள் கண்ணேபோல் காத்து வந்தனர்.

     கி.பி.1538-1732 இது மதுரையிலும் தஞ்சையிலும் நாயக்க மரபினர்
அரசோச்சிய காலம். இவர்களும் இத்திருக்கோவிலுக்கு எண்ணற்ற
திருப்பணிகள் செய்து வந்தனர். கி.பி. 1659-1682 சொக்க நாத நாயக்க மன்னர்
இத்திருக்கோவிலுக்கு பலதிசை களினின்றும் சாலைகள் அமைத்து எதிரிகளால்
தாக்க முடியாத அரண்போன்ற கதவுகளை நுழைவாயிலில் பொருத்தினார்.
கி.பி. 1016-1732 விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மூன்றாம் பிரகாரத்தில் ஒரு
மண்டபத்தையும் கண்ணாடி அறையினையும் கட்டுவித்தார். இக்கோவிலின் பல
தூண்களில் நாயக்க மன்னர்கள் இறைவனைத் தொழுதவண்ணம் உள்ள
சிற்பங்களை இன்றும் காணலாம்.

     கி.பி.1732-1800 நாயக்க மன்னர்களுக்குப் பிறகு தமிழகத்தின்
ஆட்சிப் பொறுப்பு ஆங்கிலேயர்களின் உதவியால் ஆற்காடு நவாபுகளிடம்
சென்றது. ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும்