பக்கம் எண் :

583

     இது முழுமையும் சந்திர காந்தக் கல்லினால் அமைக்கப்பட்டது.

     4. அதற்கு மேற்கில் திருமெய்ய மலைக்குத் தென்புறம் அடிவாரத்தில்
மிக்க அழகுள்ளதாகவும், சயன மூர்த்தியாகவும் திகழ்பவர் ஆதிசேடனால்
அமைக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டவராகும்.

     5. மெய்யமலையின் உச்சியில் கருடனால் பிரதிட்டை செய்யப்பட்ட
பிம்பம் உயர்ந்ததான ஒரு கருடப் பச்சைக் கல்லினால் அமைக்கப்பட்டதாகும்.

     6. ஆதிசேடன் தனக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள சர்வஞானமும்
தெரியவேண்டுமெனப் பிரார்த்தித்த தலம், எனவே இச்சேத்ரம் அஞ்ஞான
இருள் நீக்கி மோட்சம் தரத்தக்கதாகும்.

     7. தற்போதுள்ள ஆலய அமைப்பு பல்லவ மன்னர்களின் குடவரைக்கல்
கோவில்கள் என்பதின் அடிப்படையில் வருவதாகும். பல்லவ மன்னன்
இரண்டாம் நரசிம்மவர்மனால் (இப்போதுள்ளவாறு) கட்டப்பட்டதாகும்.

     8. இங்கு ஆதிசேடனில் சயனித்துள்ள பெருமாள் ஸ்ரீரங்க நாதனைவிட
மிகவும் நீளமானவர். இதற்கு அருகில் உள்ள சுவற்றில் பிரம்மன் முதலிய சகல
தேவர்களும் எழுந்தருளியுள்ளனர்.

     9. ஆதிசேடன் இத்தலத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம். இவன்
பாதுகாப்பிலிருந்த பெருமானை ஒரு முறை அசுரர்கள் திருட்டுத்தனமாய் தூக்க
வந்ததாயும் ஆதிசேடன் விஷக் காற்றைவிட்டு அந்த அசுரர்களை
அழித்ததாகவும் வரலாறு. இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இங்குள்ள
ஆதிசேடன் வாயிலிருந்து விஷ ஜு வாலைகள் செல்வது போன்று செதுக்கப்
பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

     10. திருமங்கையாழ்வாரால் மட்டும் பாசுரங்களில் மங்களாசாசனம்
செய்யப்பட்டதாகும். மெய்யமென்னும் தடவரை மேல் கிடந்தானையென்றும்,
திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை என்றும், திருமெய்ய மலையாளா
என்றும், மெய்யம் அமர்ந்த பெருமாளை என்றும், மெய்யமணாளர் என்றும்
இப்பெருமாளைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார் திருமங்கையாழ்வார்.