| பிரஸாதம், பெருமாள் தீர்த்தம் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவர். இதைப்பற்றி ஆகமநூல், அகால மிருத்யு ஹரணம் ஸர்வ வியாதி விநாசனம் விஷ்ணோ பாதோதகம் பீத்வா புனர் ஜன்ம ந வித்யதே
| துளசி தளம் கலந்த ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை பருகுபவர்களுக்கு மறு பிறப்பில்லை. அகால மரணம், உடல், உள்ளம் பற்றிய வியாதிகள் எல்லாமே விலகும் என்கிறது ஆயுர்வேதம். தன்வந்திரி, சரகஸம்ஹிதை, பாஸ்கரீயம் போன்ற மருத்துவ நூல்கள் இதன் மேன்மையினையும் மருத்துவப் பயனையும் பேசுகிறது. துளசி எடுப்பதை ஸ்ரீவைஷ்ணவர்கள் திருத்துழாய் எழுந்தருளப்பண்ணுதல் என்பர். துளசியை எடுக்கும்போது கீழ்க்கண்ட ஸ்லோகத்தையும் கூறுவர். விருந்தாயை துளசி தேவ்யை பிரியாயை கேசவஸ்யச கேசவார்த்தே சினோமி த்வாம் வரதா பவ சர்வதா
| “திருமாலுக்கு உகந்த ஒளஷதியே, விருந்தா, துளசி என்றெல்லாம் போற்றப்படும் தேவியே உன்னை வணங்குகிறேன். ஸ்ரீமந் நாராயணனை ஆராதிக்க உன்னைத் தொழுகின்றேன். எனக்கு என்றும் அருள் பாலிப்பாயாக” என்பது இதன் பொருள். நம்மாழ்வார் திருவிருத்தத்தில், வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய் தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே - 2530
| என்ற பாசுரத்தில் விஷ்ணுவுக்கு துளசி மாலை, தழை, கொம்பு, வேர் நின்ற மண், ஆகிய ஏதாயினும் ஒன்றால் அர்ச்சிக்க வேண்டும். |