பக்கம் எண் :

88

11. திரு ஆதனூர்

     “என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர்தம்
          முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
     அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐ யனை”
          பெரிய திருமடல் 126 - 129 (2674)

     என்பது மங்கையாழ்வார்,

     இப்பெருமானை பாடிப்பரவும் பாசுரமாகும். இத்தலம் சுவாமி
மலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு உள்ளது. கும்பகோணத்திலிருந்து 8
கி.மீ. தொலைவு உள்ளது. இந்த ஊருக்கு நேராகவே பேருந்து வசதி உள்ளது
இத்தலத்து எம்பெருமானைச் சேவித்துவிட்டு இங்கிருந்து புள்ளம் பூதங்குடி
திவ்ய தேசத்திற்கு நடந்தே சென்றுவிடலாம்.

வரலாறு

     பிர்ம்மாண்ட புராணத்தின் 3வது பிரிவில் இத்தலம்பற்றி பேசப் படுகிறது.

     ஆவாகிய காமதேனு மகாவிஷ்ணுவிடம் சரணடைய வேண்டுமென்று
இத்திருத்தலத்தில் தவமிருந்து அது சித்தித்தது. காமதேனு தவமிருந்ததால்
ஆ+தன்+ஊர் ஆதனூராயிற்று. இங்குள்ள எம்பெருமானை ப்ருகு மஹரிஷியே
பிரதிஷ்டை செய்ததாக ஸ்ரீபாஞ்ராத்ர ஆகமத்தில் உள்ள பௌஷகா
ஸம்ஹிதையின் மூலம் அறியப்படுகிறது.

     ஒரு சமயம் பிறகு வைகுண்டம் சென்று எம்பெருமானையும்,
பிராட்டியையும் வழிபட பிராட்டி பூமாலையொன்று பரிசளிக்க, அத்துடன்
இந்திர லோகம் சென்ற ப்ருகு அதனை தேவந்திரனுக்குத் தர, அதனையவன்
தனது ஐராவதம் என்ற யானைக்குச் சூட்ட அந்த யானை அதனைத்
துதிக்கையில் சுற்றி கீழேபோட்டுக் காலால் மிதித்து அப்பாலும் இப்பாலும்
அசை போடுவதுபோன்று அசைய ஆரம்பித்தது.

     இதனால் மிக்க சீற்றங்கொண்ட ப்ருகு இந்திரனைச் சபிக்க இந்திரன்
எல்லாச் செல்வங்களும், சுகபோகங்களும் இழந்து இறுதியில் திருமாலிடம்
பிராயச்சித்தம் கேட்டு நிற்க, அவனை நோக்கிய பிராட்டி நான் ப்ருகுவுக்கு
பார்க்கவி என்ற பெயரில் மகளாகப் பிறந்து வளர்ந்து வருங்காலை திருமால்
என்னைத் திருமணஞ் செய்யும்போது நீ அந்த ஸ்தலத்தில் வந்து
சேவிப்பாயாக, உனது சாபந்தீரும் என்று கூற அவ்விதமே எம்பெருமான்
பார்க்கவியைத் திருமணஞ்செய்யும் போது