ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் உயரம் 165 அடி ஆகும். 150 அடி உயரமுள்ள இத்தலத்தில் ராஜகோபுரம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. 2. இந்நகர் ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கியது. 3. 108 திவ்ய தேசங்களில் இத்தலத்திற்கு மட்டுமே உபய பிரதான திவ்ய தேசம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதாவது மற்ற ஸ்தலங்களைப் போலன்றி இங்கு மூலவருக்குள்ள சகல மரியாதைகளும் சிறப்புக்களும் உற்சவருக்குமுண்டு. இருவரும் ஒப்பிலா அழகில் திளைத்தவர்கள். உபயமாகப் பயன்படுவதே இங்கு பிரதானமானதாகவும் ஆவதால் இதற்கு உபயப் பிரதான திவ்ய தேசம் என்று பெயர். 4. வடஇந்தியாவில் 12 ஆண்டுகட்கு ஒரு முறை கும்பராசியில் குருவரும் காலத்தில் கும்பமேளா கொண்டாடப்படுவதைப் போல் 12 ஆண்டுகட்கு ஒருமுறை சிம்மராசியில் உள்ள மக நட்சத்திரத்தில் வியாழன் வரும் காலத்தில் இங்கு மகாமகம் என்னும் நீராடல் விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளான கங்கை, காவேரி, யமுனை, ஸரஸ்வதி, கோதாவரி, நர்மதா, கிருஷ்ணா, சிந்து, சரயு முதலிய ஒன்பது நதிகளும் இங்குவந்து இந்த மகாமகக் குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கி புனிதம் அடைகின்றனவாம். இச்சமயத்தில் இச்சந்நதியில் உள்ள மகாமகப் பொற்றாமரைக் குளத்தில் நீராடுவது மிகப் பெரிய புண்ணியமாகும். இந்த குளக்கரையில்தான் 9 நதி கன்னிகைகட்கு அவர்களின் உருவத்திற்கொப்ப 9 சிலைகள் உள்ளன. இவ்வமைப்பு இங்கு மட்டும் உள்ளது. 5. இத்தலத்தில் அமைந்துள்ள சித்திரைத்தேர் அல்லது சித்திரத்தேர் எனப்படும் தேர் தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்றாகும். இத்தேரை திருமங்கையாழ்வாரே இப்பெருமானுக்கு அர்ப்பணித்தார். அழகிய சித்திரங்களும், நுண்ணிய வேலைப்பாடும் நிறைந்தது இத்தேர். இத்தேரினையே மங்களாசாசனம் செய்வது போல் திருவெழு கூற்றிருக்கை என்னும் பிரபந்தத்தை அருளிச்செய்தார். தேரின் உருவமைப்பை ஒத்தான |