14முன்னுரை

10.
     அன்புமிக்க பெரியாரவர்கட் கனேக வணக்கம். நலம்; விரும்புவததுவே. தாங்களன்புடனனுப்பிய பெரியபுராண விரிவுரை நிறைவு விழா அறிக்கை பெற்றேன். தங்களுடைய முயற்சி நிறைவுபெற்றதுபற்றி மகிழ்ச்சியடைகிறேன். தங்களால் 12, 13 தேதிகளில் நடத்தப்பெறும் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெறவேண்டுமெனத் திருவருளைச் சிந்திக்கின்றேன்.
வடக்குச் சித்திரை வீதி,
மதுரை 9-7-48
தங்கள்,
இ. ம. கோபாலகிருஷ்ணன் கோன்
 
11.
(By Telegraph)
     Siva Kavimani - Subramania Mudaliar, c/o Temple, Chidambaram; Invoking Lord Siva blessing.
DR. ANNAMALAI
Tenkasi
12.
     அன்பும், அறிவும், சீலமும், ஆற்றலும், பொறுமையும், தெளிவும், தேற்றமும், ஒருங்கே நன்கமைந்த ஐயா அவர்கள் திருவடிகட்கு அடியேன் மனமுவந்த வணக்கம். தங்களுக்கு நலத்தோடு ஆயுள் நீட்டிக்கப் பெருமானை பிரார்த்திக்கிறேன்.
     தாங்கள் திருக்கடவூருக்குச் சஷ்டியப்தபூர்திக்கு வந்திருந்தபோது பிச்சக்கட்டளை ஆபீஸில் சொற்பொழிவு (கலயனார் சரித்திரம் என்ற ஞாபகம்) ஆற்றி வரும்போது ஸ்ரீமான் ஆலத்தம்பாடி ஐயா அவர்கள் பெரியபுராண உரை இவ்வளவு விரிவாகப் போய்க்கொண்டிருந்தால் முடிவைப்பெறாது போய்விடும்; ஆனதால் சுருக்கமாக எழுதினால் முடிந்துவிடும் என்று சொல்லியபோழ்து அடியேன் சொன்னது : "Rev. G. U. Popeக்கு Master Baliol etc. yu will live to finish it" என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். தாங்களும் அது சரிதான் என்று ஒப்பி உறுதிகொண்டீர்கள்.
     புராணமும் பெரியது; உரையும் விரிந்தது.
     குரு உபதேசத்திற்கு "ஆண்டு பன்னிரண்டாகில் அருளிச்செய்வா" என்று சாத்திரத்திற் கூறிய கால அளவையும் கடந்து 2 வருடம் அதிகப்பட்டது. ஆகவே எம்பெருமான் திருவருள், தங்கட்கும் தங்கள் உற்ற துணைவியம்மையர்க்கும் சித்தித்ததாகவே நிச்சயப்பட்டது.
     இப்பெரியபுராணம் முதன்மைச் சேக்கிழாரால் தொடங்கிப் பூர்த்தியானது சிதம்பரத்தில். அதற்கேற்ப இவ்விரிவுரையும் முதன்மையாராகிய தங்களால் தொடங்கப்பெற்று பூர்த்திபெற்றுச் சிதம்பரத்திலே தெரிசனத்தன்று ஸ்ரீகுஞ்சித பாதத்திற் சார்த்தப்பெற்று யாவரும் காண இருப்பதும் அவன் திருவருளே!
     திருக்கடவூர்த் திருக்கைவாஸம் பிள்ளையவர்கள் ஸ்ரீ அபிராமி அமுதகடேசர் தெரிசனத்திற்குத் தங்கள் எல்லாருடைய வரவையும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
     தங்கள் குடும்பத்தில் அதாவது குலத்தில் பெரியபுராணம் ஊறியிருப்பதால் இவ்விரிவுரை எழுதிமுடிக்க வசதி ஏற்பட்டதாக எண்ணினேன்.