|
தங்களுடைய திருவுள்ளத்தில் திருவருள் குடிகொண்டிருப்பதால் தங்கள் ஆயுளைத் திருவருள் நீட்டித்து விரிவுரையை (பாக்கியை) அச்சேற்றவும் இன்னும் பல வகையில் மக்களறிவை விளக்கவும் அருள்செய்யப் பிரார்த்திக்கிறேன். தொண்டை நாட்டார் அரிய பெரிய புராணத்தை இயற்றித் தந்தார்; அதற்குச் சேரநாட்டார் விரிந்த உரை யாவர்க்கும் நன்கு விளங்கும்படி செய்துதந்தார் என்பது போற்றத்தக்கது. ஸ்ரீ ஆலவாய்ப்பெருமான் சேர மன்னனுக்குத்தானே திருமுகங் கொடுத்தனுப்பினார். |
பாண்டிப்பெருமான் சேரனுக்கு அனுப்பியது போற்றத்தக்கதல்லவா? ஆகவே புதைபொருளாகச் சேரநாட்டில் பெரியபுராணப் பொருள் பொதிந்துகிடந்து இப்பொழுது சேரநாட்டுச் சிவக்கவியரசால் விளங்கி விரிந்து நிலைத்ததை யாவரும் கண்குளிரக்??? காண்கிறோம். |
செட்டித் தெரு, | மாயவரம், 4-7-48 | | அடியேன், | ந. முத்தையா முதலியார் | | | |
13. |
தமிழ்ப் பெரியார் திரு. சி. கே. எஸ். அவர்களுக்கு, அடியேன் வணக்கம். |
தாங்கள் கொண்டிருந்த எண்ணம் - பெரியபுராண விரிவுரை - இனிது நிறைவாகிறதுபற்றி, என்னுடைய மனமுவந்த சந்தோஷத்தையும் தங்கள்மேல் வைத்திருக்கும் பெருமையையும் தெரிவித்துக்கொள்வதுடன், தமிழர் என்றும் தங்களுக்குக் கடமைப்பட்டவராய் விட்டார்கள். |
தமிழ்நாடும், தமிழும் இப்பேர்ப்பட்ட ஆன்றோர்களால் நவீனகாலமாகிய இன்று மிகுந்த கண்யமடைந்துவிட்டதென்று சொல்வேன். |
சேக்கிழார் நூலுக்கு, சேக்கிழார் மரபினர் விரிவுரை எழுதியது மிகவும் பொருத்தம். |
தங்களுக்கு இதுபோல் ஆராய்ச்சியுரை எழுதச், சிதம்பரநாதர் ஆற்றலும், ஆயுளும் தருவார் என்பதே சிறியோனாகிய என் தீர்மானமான கருத்து. அவ்விதமே அப்பனைப் பிரார்த்திக்கிறேன். |
திருவருட்டுணையால், அம்மகத்தான காரியம் இனிமையாய் முடியும். |
| இப்படிக்கு தங்கள் அடியேன் | A. பழனிசாமி | கவர்ன்மெண்டு வக்கீல் | | |
14. |
1 கூத்தப் பெருமான் ஆயிரக்கால் கூடு மிடத்துச் சேக்கிழார் |
யாத்த விரிநூற் பொருள்விரிவும் இந்நாள் அரங்கம் ஏறுதலால் |
மூத்த முதல்வன் பேரருளே முன்னின் றாட்டு முறையுணர்க் |
காத்த முதல்சுப் பிரமணியர் கடவு ளின்பால் வாழியரோ. |
|
2 தொண்டத்தொகையும் வகைவிரியும்தொல்லோன் அமைத்ததுணையேபோல் |
கண்ட விரியின் சொற்பொருளும் காட்டும் கண்ணார் ஓவியமும் |
மண்டு பொறியின் அமைவனப்பும் எளிமை விரியும் மாண்புறவே |
கண்ட சிவனார் கவிமணியும் நூலும் வாழ்க கண்ணளித்தே. |