|
| 19 |
| வாழ்த்து |
| தேவர்க்கும் அரிதாய திருத்தொண்டர் புராணவுரை சேக்கி ழார்முன் |
| யாவர்க்கும் இனிதாக இருந்துரைக்க மண்டபத்தே எழுந்த கூத்தர் |
| மூவர்க்கும் அறியவொணா முளரிமலர்த் தாள்சார்த்தி முற்றச் செய்தான் |
| பாவர்க்கநலமுணருங் கோவைச்சுப் பிரமணியப் பத்திமானே. நலம்பெருகுக! |
| பாலறாவாயர் நிலையம், | | சம்பந்தர் தெரு, | தேவகோட்டை, 25-7-48 | | | | வயிநாகரம் - வே. இராமநாதன் செட்டியார், | பாலகவி, தருமபுர ஆதீன வித்துவான் | |
|
| 20 |
திருத்தொண்டர் புராணப் பேருரை நிறைவு விழா - தில்லைச் சிற்றம்பலத்தில் 12-7-48, 13-7-48ல் நடைபெறும்போது - கோவைத் தமிழ்ச் சங்கத்தார் |
| தந்தளித்த |
| வாழ்த்துப் பா |
| யவன நாட்டில் எவரும் வியந்த |
| கவன ஆற்றற் காட்சி ஏழாம்; |
| எவனும் வியந்த இவற்றின் மேலாய் |
| அவனும் போற்ற அளித்தாய் உரைநீ. |
(1) |
| பெரிய புராணம் பெரிதோர் வியப்பே, |
| உரிய தமிழர் உணர்ந்தார் இல்லையே, |
| அரிய உணர்வை அளிக்கத் தொடங்கித் |
| தெரிய வைத்தாய் தெளிந்த உயர்வால் |
(2) |
| பொருளை ஏழாய்ப் புகன்றார் பிறரோ, |
| இருளை ஓட்டி இன்பம் தாலில் |
| அருளைக் கொட்டும் அரிய நூல்சொல் |
| தெருளை ஈந்தாய் திரள்ஈ ரேழில். |
(3) |
| கோவைத் தமிழர் குழுவார் செய்த |
| சேவை யாதோ செப்ப மாட்டோம், |
| தேவை இதுவே தெளிவீர் என்றே |
| ஏவல் இட்டாய் இதுதான் அறிவோம். |
(4) |
| எங்கள் சங்கம் இனிய புகழைத் |
| திங்கள் அளியில் தேர்ந்து வைத்தாய் |
| கங்குல் பகலும் கவின்நின் உரையில் |
| துங்கப் பொருளின் தொடர்பை அளித்தாய். |
(5) |
| பூவின் மணமோ பூவைப் பிணைநார் |
| தாவின் மணத்தில் தகுமாம், அதுபோல், |
1. Seven wonders of the world. |