18முன்னுரை

19
வாழ்த்து
தேவர்க்கும் அரிதாய திருத்தொண்டர் புராணவுரை சேக்கி ழார்முன்
யாவர்க்கும் இனிதாக இருந்துரைக்க மண்டபத்தே எழுந்த கூத்தர்
மூவர்க்கும் அறியவொணா முளரிமலர்த் தாள்சார்த்தி முற்றச் செய்தான்
பாவர்க்கநலமுணருங் கோவைச்சுப் பிரமணியப் பத்திமானே. நலம்பெருகுக!
பாலறாவாயர் நிலையம்,
சம்பந்தர் தெரு,
தேவகோட்டை, 25-7-48
 
வயிநாகரம் - வே. இராமநாதன் செட்டியார்,
பாலகவி, தருமபுர ஆதீன வித்துவான்
20
     திருத்தொண்டர் புராணப் பேருரை நிறைவு விழா - தில்லைச் சிற்றம்பலத்தில் 12-7-48, 13-7-48ல் நடைபெறும்போது - கோவைத் தமிழ்ச் சங்கத்தார்
தந்தளித்த
வாழ்த்துப் பா
யவன நாட்டில் எவரும் வியந்த
கவன ஆற்றற் காட்சி ஏழாம்;
எவனும் வியந்த இவற்றின் மேலாய்
அவனும் போற்ற அளித்தாய் உரைநீ.
(1)
பெரிய புராணம் பெரிதோர் வியப்பே,
உரிய தமிழர் உணர்ந்தார் இல்லையே,
அரிய உணர்வை அளிக்கத் தொடங்கித்
தெரிய வைத்தாய் தெளிந்த உயர்வால்
(2)
பொருளை ஏழாய்ப் புகன்றார் பிறரோ,
இருளை ஓட்டி இன்பம் தாலில்
அருளைக் கொட்டும் அரிய நூல்சொல்
தெருளை ஈந்தாய் திரள்ஈ ரேழில்.
(3)
கோவைத் தமிழர் குழுவார் செய்த
சேவை யாதோ செப்ப மாட்டோம்,
தேவை இதுவே தெளிவீர் என்றே
ஏவல் இட்டாய் இதுதான் அறிவோம்.
(4)
எங்கள் சங்கம் இனிய புகழைத்
திங்கள் அளியில் தேர்ந்து வைத்தாய்
கங்குல் பகலும் கவின்நின் உரையில்
துங்கப் பொருளின் தொடர்பை அளித்தாய்.
(5)
பூவின் மணமோ பூவைப் பிணைநார்
தாவின் மணத்தில் தகுமாம், அதுபோல்,
1. Seven wonders of the world.