|
| நாவின் வல்லாய், நாமும் நின்னால் |
| பாவின் பொருளைப் பண்பாய்ப் பெற்றோம். |
(6) |
| இந்தப் பொருளை ஏற்ற யாங்கள் |
| எந்த முறையில் ஏத்தித் தருவோம், |
| சிந்தை இன்றிச், செம்மால், என்றும் |
| எந்தை அருளால் இனிதே வாழி. |
(7) |
| நலம், நலம், நலம். |
கோவை 12, 13-7-48 |
| கோவைத் தமிழ்ச் சங்கத்தினேம் |
| 21 |
| பொன்னென்கோ, மணியென்கோ, பாலென்கோ, தேனென்கோ, |
| பொருந்துசிவ, போகம், என்கோ, |
| மன்னென்கோ, மலரென்கோ, மணமென்கோ, மழையென்கோ, |
| விருந்தென்கோ, மருந்தே, என்கோ, |
| உன்னரிய, கரும்பென்கோ, கண்டென்கோ, இவையனைத்தின், |
| பயனென்கோ, உயிரே, என்கோ, |
| என்னென்கோ, குன்றைமுனி, கவிநயங்காண், கோவைமுனி, |
| உரையகலத், தியல்பை மன்னோ. |
| இங்ஙனம் |
| ச. ஆ. இரத்தினவேற் புலவர், |
| காரியதரிசி, ஸ்ரீ சேக்கிழார் திருவருட் கழகம், சிதம்பரம். |
| 22 |
| வாழ்த்து மொழி |
| தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி |
| வாக்கினாற் சொல்ல வல்லபிரா னெங்கள் |
| பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ் |
| சேக்கி ழானடி சென்னி யிருத்துவாம். |
மூர்த்தி நாயனார் புராணத்தில் "எந்தெம் பெருமக்களை யாவரே தடுக்கவல்லார்" என்பது நமது சேக்கிழார் நாயனார் அவர்களின் வாக்கென்றால் அவரைத் தவிர அடியார்களின் பெருமையைத் தெரிந்த புராணிகர்களே இல்லை எனலாம். |
இப்பெரும் புராணத்திற்கு விரிவுரை நமது சிவக்கவிமணி சுப்பிரமண்ய முதலியார் அவர்கள் எழுதினால் அவரின் பெருமையை சிற்றறிவுடைய நாயினேனால் வரையவியலுமா? ஆயினும் ஆசையால் எழுதினேன். நிற்க. |
கயப்பாக்கம் சிவத்திரு சதாசிவம் செட்டியார் அவர்களால் பெரியபுராண விரிவுரை வெளிவரும் என்று கேள்வியுற்று மேற்படி சிவக்கவிமணியவர்களுக்கு எழுதினேன். அதற்கு அவர் சில இடைஞ்சலால் நின்றுவிட்டது; வெளியானதும் தெரிவிக்கிறேன் என்று பதில் விடுத்தனர். அது கண்டு நம் தமிழ்நாடு புண்ணியம் செய்யவில்லையே என்று கவலையற்றிருந்தேன். சில ஆண்டுகளுக்குப்பின் முதலியார் |