|
நாவின் வல்லாய், நாமும் நின்னால் |
பாவின் பொருளைப் பண்பாய்ப் பெற்றோம். |
(6) |
இந்தப் பொருளை ஏற்ற யாங்கள் |
எந்த முறையில் ஏத்தித் தருவோம், |
சிந்தை இன்றிச், செம்மால், என்றும் |
எந்தை அருளால் இனிதே வாழி. |
(7) |
நலம், நலம், நலம். |
கோவை 12, 13-7-48 |
கோவைத் தமிழ்ச் சங்கத்தினேம் |
21 |
பொன்னென்கோ, மணியென்கோ, பாலென்கோ, தேனென்கோ, |
பொருந்துசிவ, போகம், என்கோ, |
மன்னென்கோ, மலரென்கோ, மணமென்கோ, மழையென்கோ, |
விருந்தென்கோ, மருந்தே, என்கோ, |
உன்னரிய, கரும்பென்கோ, கண்டென்கோ, இவையனைத்தின், |
பயனென்கோ, உயிரே, என்கோ, |
என்னென்கோ, குன்றைமுனி, கவிநயங்காண், கோவைமுனி, |
உரையகலத், தியல்பை மன்னோ. |
இங்ஙனம் |
ச. ஆ. இரத்தினவேற் புலவர், |
காரியதரிசி, ஸ்ரீ சேக்கிழார் திருவருட் கழகம், சிதம்பரம். |
22 |
வாழ்த்து மொழி |
தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி |
வாக்கினாற் சொல்ல வல்லபிரா னெங்கள் |
பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ் |
சேக்கி ழானடி சென்னி யிருத்துவாம். |
மூர்த்தி நாயனார் புராணத்தில் "எந்தெம் பெருமக்களை யாவரே தடுக்கவல்லார்" என்பது நமது சேக்கிழார் நாயனார் அவர்களின் வாக்கென்றால் அவரைத் தவிர அடியார்களின் பெருமையைத் தெரிந்த புராணிகர்களே இல்லை எனலாம். |
இப்பெரும் புராணத்திற்கு விரிவுரை நமது சிவக்கவிமணி சுப்பிரமண்ய முதலியார் அவர்கள் எழுதினால் அவரின் பெருமையை சிற்றறிவுடைய நாயினேனால் வரையவியலுமா? ஆயினும் ஆசையால் எழுதினேன். நிற்க. |
கயப்பாக்கம் சிவத்திரு சதாசிவம் செட்டியார் அவர்களால் பெரியபுராண விரிவுரை வெளிவரும் என்று கேள்வியுற்று மேற்படி சிவக்கவிமணியவர்களுக்கு எழுதினேன். அதற்கு அவர் சில இடைஞ்சலால் நின்றுவிட்டது; வெளியானதும் தெரிவிக்கிறேன் என்று பதில் விடுத்தனர். அது கண்டு நம் தமிழ்நாடு புண்ணியம் செய்யவில்லையே என்று கவலையற்றிருந்தேன். சில ஆண்டுகளுக்குப்பின் முதலியார் |