26முன்னுரை

தாங்கள் சிவபெருமான்போல் கவிப்பிரியன் - ஆனால் நல்ல கவி சொல்லும் ஆற்றல் அடிமையிடம் இல்லை - அன்புமாத்திரம் நிறைய உண்டு - அன்பால் எழுதும் பாடல்கள் உள. அடிமையின் கையுறையாக ஏற்றுக்கொள்ளவேண்டி நிற்கும் அடிமை.
 
1.    சோணாடு முன்செய்த நற்றவத் தால்வந்து சோழர்புகழ்
சேணாடு முட்டத் திருத்தொண்டர் காதையைத் தீந்தமிழின்
மேனா ளருண்மொழித் தேவ னருண்மொழி வீறுபெற
மாணார் விரிவுரை தந்தனன் சுப்பிர மண்ணியனே.
 
2    வரமலி தொண்டர் புராணம் நுனிந்துமுன் னோர்வரைந்த
உரைமலி செம்பொருள் கற்றோர் குறிப்பு முடன்றழுவித்
தரைமலி நல்லுரை கண்டளித் தான்சங் கரன்மலர்த்தாள்
சிரமலி செல்வன் சிவசுப்ர மண்ய சிவக்கவியே.
 
3    வேதா கமஞ்சொன்ன வேதப் பெருமான் வியனருளால்
வேதா கமத்தனு பூதிப் புராணம் விரித்துரைத்தார்
பாதார விந்தம் வழுத்தியந் நூற்குப் பதவுரைசெய்
தாதா சிவசுப்ர மண்ணியன்கோவைத் தவமுனியே.
 
4    ஓரா யிரத்துத் தொளாயிரத் தோர்நாற் பஃதிருநாள்
கேரார் மிதுன மதியுத் தரத்தி லிலங்குமெழிற்
சீரார் கனகத் திருமன்றி லன்பர் திகழவையிற்
பாரார் புகழ்நூ லுரையரங் கேறிப் பயன்றருமே.
 
5    மலைப்பால் முளைத்திந்த வண்டங்கள் பூத்திட்ட வம்மையிரு
முலைப்பா லொழுகு திருவாயன் காழி முளைத்தசிவக்
கலைப்பாலில் வந்த கவுணியப் பிள்ளை கருணையிலிந்
நிலத்தா யிரம்பிறை நீகண்டு வாழி நிறைதவனே.
 
 
கண்டி - (இலங்கை).
அடிமை
க. வேலுப் பிள்ளை               
 
31
 
அன்புருவாய அண்ணல்!
     சேக்கிழார் மரபிற்றோன்றி, அவர் பெரும் புராணத்துக்குச் சிறப்புவாய்ந்த பேருரைகண்ட பெரியோய் வாழ்க, வாழ்க, ஸ்ரீ நடராஜப்பெருமான் திருவருள் உங்கள்பால் பெருகப் பெருகவே.
 
12-07-48
 
க. சண்முகம்               
  வழக்கறிஞர், திருவாரூர்
 
32
உரை நிறைவு விழா
     தெய்வச் சேக்கிழாராலன்றிப் பிறரால் பெரியபுராணத்தை இத்தகைய அழகிய பாடல்களாக இயற்றல் அரிது. அஃதேபோன்று பெரிய புராணத்திற்கு ஆராய்ச்சியும், நுட்பமும், விரிவும், தெளிவும், மேற்கோள்களும் அமைந்தஉரை காணல் சிவக்கவிமணி அவர்கட்கன்றிப் பிறர்க்கரிது என்பது சைவ உலகின்