திருத்தொண்டர் புராணமும் - உரையும்29

நிலைநீங்கி யோருருவின் வந்துதம துள்ளம்
     நினைந்தவா புரியவரு ணெறிபிடித்த வடியார்
குலமுரிய பெருமையெலா மளப்பரிதே யவற்றைக்
     கூறவல்லார் சேக்கிழா ரன்றியிலர் பிறரே.
 
2    தெய்வமணங் கமழ்வது சிவாநந்தச் செழுந்தேன்
     தெவிட்டாது பொழிவதுண்மை தெரிந்தவருக் கிகத்தே
மெய்வகைய கரணமெலா மழன்மெழுகா யுருகு
     வித்தழிவில் பேரின்ப விடளிக்குந் தகைத்துச்
செய்வினைகள் பிறவெனினு நல்வினையே யாகச்
     செய்யுமன்பி னுருவமுறு சித்திரங்காட் டுவது
கைவரநந் தமிழ்நோற்ற நற்றவத்தாற் றோன்றும்
     காட்சியதாந் திருத்தொண்டர் புராணமென்ப கற்றோர்.
 
3    இந்நூற்குப் பலரெழுது முரை யறிவோ மவற்று
     ளேற்ற விரிவுரை யிதுவேபோன் றில்லையென வியப்ப
முன்னூலு மேனையவாந் திருமுறைமேற் கோளு
     மொழிசைவப் பொருளின்வரு நுட்பமெலாம் பொருந்தப்
பன்னூலு மிலக்கணமு மமையவிளக் கியவப்
     பான்மையோன் புகழறிந்த படியுரைப்பா மன்றே
தொன்னூலின் பொருட்கடலும் சிவஞான போதத்
     துறைக்கடலும் கடந்தரனார் திருவடிக்கன் பின்னே.
 
4    பூமடந்தை கொங்கைமுகட் டிலகுமணிக் கோவை
     போன்றுகொங்கை யணியுறுத்துங் கோவைநகர்ப்பதியோன்
நாமடந்தை பணிகேட்குஞ் சேக்கிழார் மரபோன்
     நற்றமிழின் சுவைபிறர்க்கு நல்கிடுஞ்சீர்ப் புலவன்
கோமகனா கியகந்த சாமிப்பேர்ச் சைவக்
     குலதிலகன் றவமனைத்துந் திரண்டுருவாம் தோன்றல்
நேமமிகுஞ் சிவனடிக்கே மனமளித்தன் பிணையே
     நேர்வேண்டுஞ் சுப்ரமண்ய நேயனைவாழ்த் துதுமே.
 
5    தவஞ்செய்த தவமோநற் றமிழ்செய்தவப் பேறோ
     சைவந்தான் பன்னெடுநாட் புரிதவங்கா ரணமோ
நவவடிவ னாட்டயருந் திருத்தில்லை யரங்கில்
     நன்குமுதற் றொடங்கிமுற்று வித்துமற்று மாங்கே
கவிஞர்குழாம் புகழ்ந்தேத்த அன்பர்கரங் குவிப்பக்
     கண்டோர்க ளுளங்கரைந்து கண்ணீராய்ப் பெருகச்
சிவமாரும் கவிமணியைப் பணிகொண்டான் எங்கள்
     செல்வன் பொற் புகழ்வேட்கை யாவரிடத் துளதே.
 
வெண்பா
தன்பேர்கொள் சேக்கிழார் தம்மாலிந் நூலாக்கிப்
பின்போ ரரியவுரை பேசுமா - அன்பாற்றன்