32முன்னுரை

மதிப்புரை
     தூத்துக்குடிச் "சித்தாந்தப் பேராசிரியர்" "சைவசித்தாந்த" திரு. ந. சிவகுருநாத பிள்ளை அவர்கள் மனமுவந்தெழுதிய ஆசியுரை :-
     உயர் சைவத் திரு. "சிவக்கவிமணி"
C. K. சுப்பிரமணிய முதலியாரவர்கள், B. A., கோவை.
     வணக்கம். தங்கள் தவ உடலின் பாங்கறியும் ஆவலுடையேன். தாங்கள் அடியேனது 75-ஆம் ஆண்டுப் பிறந்தநாட் பரிசாகப் பெரிய புராண விருத்தி உரையின் மூன்றாம் பகுதி இரண்டாம் பாகமும், எமது ஆண்டவன் திருஞான சம்பந்தப் பெருமான் புராணம் 1 - 100 வரையுள்ள பாடல்கள் அடங்கிய பகுதியும் அனுப்பியருளினமைக்குப் பெரிதும் நன்றி செலுத்துகின்றேன். கண்ணைக் கவரும் பதிப்பின் அழகும், கருத்தைக் கவரும் உரையின்நலமும் பொருந்திய பெரிய புராணத்தைப் பெரியீராகிய தாங்களேயன்றி வேறு எவர் அளித்தற்குரியார்!
     தாங்கள் மேற்கொண்டுள்ள அரும்பெரும் தொண்டு விரைவில் இனிது நிறைவேறும் வண்ணம் தங்கட்கு எல்லா நலன்களையும் அளித்தருளப் பொன்னம்பல வாணன் இன்னடிகளை ஏத்துகின்றேன்.
 
செயற்கரிய செயல்செய்து சிவனடிக்கே யாளாகி
உயர்ச்சிபெறும் அடியவர்தம் உண்மைபுகல் புராணத்தை
அயற்சமயி களுங்கற்றே அன்புநிலை புரிந்திடற்காம்
மயற்சியறு முரைவிரிக்குஞ் சுபபிரமண்யன் வாழ்கவரோ.
அன்பன்   
ந. சிவகுருநாதன்
37
சிவ முருகா
வாழ்த்துப்பா
கண்டி - (இலங்கை) - 31 - 11 - 47
     கண்டி அன்பர் திரு. க. வேலுபிள்ளை அவர்கள் அன்புடன் அனுப்பியது.
 
ஐயா! முருகா! வயில்வேல் கரத்தேந்துஞ்
செய்யா! கதிரைமலைச செவ்வேளே! - தெய்வக்
கவிக்குரைசெய் சைவக் கவிமணிக்குன் னாசி
நிதிக்குவையோ டீவாய் நிதம்.