தனிமுதற் குழவி - 1939. முருகப் பெருமான்.
தில்லைவாழந்தணர் - 2052 - 2060 - 2068 - 2069. தில்லை மூவாயிரவர்; நடராசருக்கு அகம்படித் தொண்டு பூண்டு உரிமைப் பணிபுரிவோர்; தில்லை நான் மறையோர் 2072. |
திருநாவுக்கரையர் - 2166. திருநாவுக்கரசு நாயனார். |
திரு அணுக்கன் திருவாயில் - 2057. தில்லையம்பலத்தில் நடராசருக்கு அணுக்கமாக உள்ள திருவாயில். |
திரு அரத்துறை - நெல்வாயி லரத்துறை எனப்படும். ஆளுடைய பிள்ளையாருக்கு முத்துச்சிவிகை முதலியன அருளிய பதி. |
திரு எருக்கத்தம் புலியூர் - 2076. நடு நாட்டுப் பதிகளுள் ஒன்று. தல விசேடம் lV - 212 |
திரு எல்லை - 2045. தில்லைப்பதியினின்றும் காததூரத்தில் நாற் புறமும் உள்ள அமைப்பு. |
திருக்களிற்றுப் படி - 2071. தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் ஐந்து படிகள்; களிற்றுக்கை போன்ற அமைபபு இருபுறமும் உள்ள காரணத்தாற் போந்த பெயர். |
திருக்கயிலை - 2244. இறைவரது திருமலை. |
திருக்கருவூர் ஆனிலை - 2237. கருவூர் - கொங்கு நாட்டுப் பதிகளுள் ஒன்று. ஆனிலை - திருக்கோயிலின் பெயர். |
திருக்கொடிமாடச் செங்குன்றூர் - 2222. கொங்கு நாட்டுப் பதிகளுள் ஒன்று. திருச்செங்கோடு என வழங்குவது. |
திருத்தூங்கானை மாடம் - 2082. திருப் பெண்ணாகடத்தின் கோயில். |
திருத்தோணி - 1997 - 2041. சீகாழியில் தோணியப்பர் எழுந்தருளியிருக்கும் தோணிவடிவாகிய சிகரக்கோயில். கோயிலினுள் மலை என வழங்குவர். |
திருநணா - 2225. பவானி என வழங்கும். கொங்கு நாட்டுப்பதிகளுள் ஒன்று. |
திருநீலகண்டப் பெரும்பாணர் - 2029 - 2042 - 2075. 63 நாயன்மார்களுள் ஒருவர். |
திருநீல நக்கர்- 2358 திருநீலகண்டம்-2233.இறைவரது கழுத்து;கரிய விடந்தங்கியதால் காரணப் பெயர் பெற்ற |
திருநெல் வெண்ணெய் - 2127. நடு நாட்டுப்பதிகளுள் ஒன்று. |
திருப்பள்ளி எழுச்சி - 2093. இறைவரது வழிபாட்டுக்குரிய முதற்காலம். |
திருப்பாண்டிக் கொடுமுடி - 2235. மயேந்திரமாமலை; இங்கே சிவபெருமான் ஆகமங்களை வெளிப்படுத்தியருளினார். "மன்னு மாமலை மகேந்திர மதனிற், சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்" (திருவாசகம் - கீர்த்தி), |
திருமுதுகுன்றம் - 2078, நடுநாட்டுப் பதி; நம்பிகள் 12000 - பொன் பெற்றபதி. |