|
முன் சேர்க்கை - 2 |
திருமுறைகளின் இச்சரிதப் பகுதியின் ஆதரவு |
ஆளுடைய பிள்ளையார் புராணம் பற்பல பகுதிகளுக்கும் சைவ தெய்வத் திருமுறைகளின் சரித ஆதரவு காணலாம். அவற்றுள் இப்பகுதியைப் பற்றிய சிலவற்றை, ஈண்டுத் தருகின்றேன். ஏனைய பகுதிகளைப் பற்றியவற்றை ஆங்காங்குக் குறிக்க எண்ணியுள்ளேன். |
தேவாரம் :- |
"போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத் |
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்" |
- பிள்ளையார் - தேவாரம் |
11-ம் திரு முறை :- |
".....உலக மூன்றுக்குங் களைக ணாகி, |
முதலில் கால மினிதுவீற் றிருந்துழித் |
பட்டினத்துப் பிள்ளையர்:- |
தாதையோடு வந்த வேதியச் சிறுவன், |
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த, |
"அன்னா யோ"வென் றழைப்பமுன் னின்று, |
ஞான போனகத் தருளட்டிக் குழைத்த |
ஆனாத் திருளை யவன்வயி னாருள, |
வந்தணன் முனிந்து தந்தா ரியா?ரென, |
அவனைக் காட்டுவ னப்ப! வானார் |
தோடுடைய செவிய னென்றும் |
பீடுடைய பெம்மா னென்றுங் |
கையிற் சுட்டிக் காட்ட, |
ஐயநீ வெளிப்பட் டருளினை யாங்கே." |
- திருக்கழுமல மும்மணிக்கோவை 1 |
நம்பியாண்டார் நம்பிகள் :- |
......அம்மென் குதலைச் செவ்வாய், |
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின் |
றைய லருள்பெற் றனனென்பர் ஞானசம் பந்தனையே. |
- திருத்தொண்டர் திருவந்தாதி 33 |
"......வேதத் தலைவன் மெல் விரலாற், |
றோட்டியல் காத னிவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற், |
காட்டிய கன்று..........." |
- ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 13 |
"இருந்தண்புகலி.....போனகம்..........அரனளித்த, |
பெருந்தகை............" |
- மேற்படி 40 |
துளிவந்த கண்பிசைந் தேங்கலு மெங்க ளரன்றுணையாங் |
கிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தில் ஞான வமுதளித்த" |
- மேற்படி 78 |