52நான்காம் பகுதியின் முன்னுரையின் முற்பகுதி

"குஞ்சிகூடாப் பருவத்துக் குன்றவில்லி,
 பங்குதங்கும் மங்கை தன்னருள் பெற்றவன்".........
- திருச்சண்பை விருத்தம் - 2
"ஞானத்திரளையிலே யுண்டனை..........என்று"
- ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை - 12
".......அமுதுண்டு செவ்வா யருவி தூங்க............"
- மேற்படி 19
"...எஞ்சாமை, யாதிச் சிவனருளாலம்பொன் செய்வட் டிலினிற்,
 கோதி லமுதுநுகர் குஞ்சரத்தை............"
- ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
"..........ஈங்கருளி யெம்போலவார்க் கிடர்கெடுத்தல் காரணமா
 ஓங்குபுகழ்ச் சண்பையெனு மொண்பதியு ளுதித்தனையே
 செஞ்சடைவெண் மதியணிந்த சிவனெந்தை திருவருளால்
 வஞ்சியன நுண்ணிடையாண் மலையரையன் பொற்பாவை
 நற்கண்ணி யளவிறந்த ஞானத்தை யமிர்தாக்கிப்
 பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் னுகர்ந்தனையே
 தோடணிகா தினனென்றுந் தொல்லமரர்க் கெஞ்ஞான்றுந்
 தேடரிய பராபரனைச் செழுமறையி னகன்பொருளை
 யந்திச்செம் மேனியனை யடையாளம் பலசொல்லி
 உந்தைக்குக் காணவர னுவனாமென் றுரைத்தனையே
- ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் - 1
"......மலைமா துமையொடு மிகவனா வானென முன்னா ளுரை
 செய்தவன்......"
- மேற்படி - 7
"பண்டமுது செய்துமை நங்கை யருண்மேவு சிவஞானம்"
- மேற்படி - 9
"பூவார் திருநுதன்மேற் பொற்சுட்டி யிட்டொளிரக்
 கோவாக் குதலை சிலம்பரற்ற - வோவா
 
"தழுவான் பசித்தா"னென் றாங்கிறைவன் காட்டத்
 தொழுவான் றுயர்தீர்க்குந் தோகை - வழுவாமே
 
 முப்பத் திரண்டறமுஞ் செய்தாண் முதிராத
 செப்பொத்த கொங்கைத் திருநுதலி - யப்பன்.
 
 அருளாலே யூட்டுதலு மப்பொழுதே ஞானத்
 திரளாகி முன்னின்ற செம்மல் - இருடீர்ந்த
 
 காழி முதல்வன் கவுணியர்தம் போரேறு
"ஊழி முதல்வ னுவ"னென்று காட்டவலான்.........."
- ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
     குறிப்பு :- பிள்ளையார் சீகாழிப் பதியில் அவதரித்தமையும், அந்தணர் மரபில் கவுணிய கோத்திரத்தில் வந்தமையும் அவரது பல பதிகங்களிலும் திருமுறைகளிலும் காணத்தக்கன. "கழுமல வூரர்க்கு" (அரசுகள், நேரிசை.) மிகவும் பார்க்க.