பக்கம் எண் :

முதற் காண்டம்111

     அவ்வுருவம் ஒரு பெரிய மலையோ? பேய் எனப்படும் அது தானோ?
பூதமோ? வேறு யாதோ? இவ்வாறு, இது என்பதற்கு உரியது ஒன்றும்
இல்லாத அவ்வுருவத்தை இசுரவேலர் கண்ட போது அஞ்சினர்; கரிய
மேகம் ஒன்று சினமுள்ள மின்னலோடு இடியை விடுத்ததுபோல, ஒப்பிடற்கு
அரிய கோலியாற்று அறைகூவிய சொல்லைக் கேட்டபோது மயங்கினர்.

     கரிய மேகம் கோலியாற்றுக்கும் இடி சொல்லுக்கும் மின் பல்லுக்கும்
உவமை.
  
                    16
நன்னெ டும்படை நடுக்குறீஇ வெருவிய தன்மை
கன்னெ டுங்குவ டொத்தனன் செருக்கெழக் கடுத்துப்
பன்னெ டும்பகல் பரமனைப் பகைப்பவு மிகழ்ந்த
சொன்னெ னெடும்பகை தொடர்ந்தன னெவரையு
                                நகைப்பான்
 
நல் நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை
நல் நெடுங் குவடு ஒத்தனன் செருக்கு எழுக் கடுத்து,
பல் நெடும் பகல் பரமனைப் பகைப்பவும், இகழ்ந்த
சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான்.

     நல்ல நெடிய இசுரவேலர் படை நடுக்கங் கொண்டு அஞ்சிய
தன்மையால், மலையின் நெடிய சிகரம் போன்ற அவன் தன் செருக்கு
மேலும் வளரக் சினந்து, நீண்ட பல நாட்களாக அவர் தொழும்
ஆண்டவனைப் பகைப்பான்; இகழ்ந்த சொல்லால் நெடும்பகை
தொடர்ந்தான்; எவரையுமே நகைப்பான்.
  
                  17
தாங்கு வாரிலா சாற்றிய வுரைகள்கேட் டெவரு
நீங்கு வாரென நிருபனு மயருதன் னெஞ்சிற்
கேங்கு வானெவ னெதிர்ந்தவவ் வரக்கனை வென்றா
லாங்கு நானவற் கென்மக லளளிக்குவே னென்பான்.
 
தாங்குவார் இலா, சாற்றிய உரைகள் கேட்டு எவரும்
நீங்குவார் என, நிருபனும் அயரு தன் நெஞ்சிற்கு
ஏங்குவான்: ''எவன் எதிர்ந்த அவ் அரக்கனை வென்றால்,
ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன்'' என்பான்.