பக்கம் எண் :

முதற் காண்டம்138

  நான்காவது  
                  
  பால மாட்சிப் படலம்  


     சூசையின் இளமைப் பருவத்து மாண்புகளை எடுத்துக் கூறும் பகுதி.

                      குழவிப் பருவம்

     -மா, கூவிளம், -மா, கூவிளம்.
 
             1   
வான டுத்தர சடைந்து வாழவக்
கோன டுத்தநற் குணத்த சீரெலா
மீன டுத்தவீ டுடைய விண்ணவர்
தேன டுத்தலர் சிறுவற் கூட்டினார்.
 
வான் அடுத்து அரசு அடைந்து வாழ, அக்
கோன் அடுத்த நல் குணத்த சீர் எலாம்
மீன் அடுத்த வீடு உடைய விண்ணவர்
தேன் அடுத்து அலர் சிறுவற்கு ஊட்டினார்.

     பிற்காலத்தில் வானுலகம் சென்று அரசாட்சியும் அடைந்து என்றும்
வாழத் தக்கவாறு, அவ்வரசனுக்கு அடுத்த நல்ல குணத்தோடு பொருந்திய
சிறப்புக்களை யெல்லாம், தேன் போன்று இன்பம் மலர்கின்ற சிறுவனாகிய
சூசைக்கு, விண்மீன்கள் அடுத்துள்ள வான்வீட்டை உறைவிடமாகக்
கொண்ட வானவர் ஊட்டி வளர்த்தனர்.
 
              2          
ஊட்டி னாரருள் முடியி னொப்பெனச்
சூட்டி னாரறஞ் சுடரும் பூணெனப்
பூட்டி னார்தவம் பொற்செங் கோலெனக்
காட்டி னாரறி வமைந்த காட்சியே.