ஊட்டினார் அருள்;
முடியின் ஒப்பு எனச்
சூட்டினார் அறம்; சுடரும் பூண் எனப்
பூட்டினார் தவம்; பொற் செங்கோல் எனக்
காட்டினார் அறிவு அமைந்த காட்சியே. |
வானவர் அச்சிறுவனுக்குத்
தெய்வ அருளை உணவாக ஊட்டினர்;
முடிக்கு ஒப்பாக அறத்தைச் சூட்டினர்; ஒளிரும் அணி போலத் தவத்தைப்
பூட்டினர்; பொன்னாலாகிய செங்கோல் போல அறிவோடு அமைந்த தெய்வக்
காட்சியைக் காட்டினர்.
'ஊட்டினார்'
என்ற குறிப்பினால் 'அருள்' உணவுக்கு ஒப்பாயிற்று.
3 |
இளைய
வான்பிறை யெனவ ளர்ந்துளம்
வளைய மாசுறா வயது மூன்றுளா
னுளைய நூலவ ருற்ற காட்சியிற்
றிளைய வானறி வெய்திச் சீர்த்தனன். |
|
இளைய
வான் பிறை என வளர்ந்து, உளம்
வளைய மாசு உறா, வயது மூன்று உளான்,
உளைய நூலவர் உற்ற காட்சியின்
திளைய வான் அறிவு எய்திச் சீர்த்தனன். |
சிறுவனும் வானத்து
இளம் பிறைபோல் வளர்ந்து, உள்ளம் நெறிவிட்டு
வளைந்து மாசு உறாமல், மூன்று வயதே உள்ளவனாய், கல்வி நூலறிவு
உடையோர் வருந்திக் கற்று அடைந்த அறிவைக் காட்டிலும் மிகுதியாக
வானுலக ஞானம் அடைந்து சிறப்புற்றான்.
4 |
அறிவுற்
றாகையி னலர்ச்செங் கையெழீச்
செறிவுற் றாசையின் றெய்வ மேற்றிவில்
நெறியுற் றார்நுதல் நிலத்தி றாழ்ந்தனன்
வறிதுற் றாமுடற் குயர்ந்த மாட்சியோன். |
|