மனத்தெளிவு அடைந்து,
பன்னிரண்டே என்னும் வயது உடையவனாகிய
சூசை, "இன்பம் என்ற பெயரால் துன்பமே விளையும் வழி எனப்படும்
திருமணம் என்றும் செய்து கொள்ளேன்" என்று உறுதிபூண்டான்.
அற வாழ்வும் அறத் துணைமையும்
-மா, கூவிளம்,
கூவிளம், கூவிளம்
57
|
உடல்கி
டந்துட லங்கடந் தானெனா
மிடல்கி டந்துயர் வீடுள வின்பது
கடல்கி டந்துக னிந்தக ளிப்புறீஇ
மடல்கி டந்தகள் வார்மலர் மானுவான். |
|
உடல்
கிடந்து உடலம் கடந்தான் எனா
மிடல் கிடந்து, உயர் வீடு உள இன்பு அது
கடல் கிடந்து, கனிந்த களிப்பு உறீஇ
மடல் கிடந்த கள் வார் மலர் மானுவான். |
உடலுக்குள்ளே
கிடந்தும் உடலைக் கடந்தவன்போல, வல்லமை
பொருந்திக் கிடந்து, உயர்ந்த வீட்டுலகிலுள்ள இன்பமாகிய கடலில்
மூழ்கிக்கிடந்து, இன்பம் கனிந்த மகிழ்ச்சிபூண்டு இதழ்களிடையே கிடந்த
தேனைப்பொழியும் மலரை ஒத்திருப்பான் சூசை.
58 |
கலையுற்
றுள்ளிரு ணீங்கிய காட்சியா
னலையுற் றிப்பொரு ளோடலை யாதுள
நிலையுற் றெந்தைநெ ருங்கடி சேர்ந்துயர்
மலையுற் றானென மாறுப டானரோ. |
|
கலை
உற்று, உள் இருள் நீங்கிய காட்சியான்
அலை உற்று இப் பொருளோடு அலையாது உளம்
நிலை உற்று, எந்தை நெருங்கு அடி சேர்ந்து, உயர்
மலை உற்றான் என மாறுபடான் அரோ. |
கல்வியைப்
பெற்று, அதன் மூலம் மனஇருள் நீங்கிய
அறிவுடையோனாகிய அவன், உள்ளம் அலைக்கப்பட்டு இவ்வுலகப்
பொருள்களை நாடி அலையாமல் நிலைபெற்று, எம் தந்தையாகிய
ஆண்டவனின் நெருங்கிய பாதங்களைச் சரணாகச் சென்று சேர்ந்து,
உயர்ந்த மலையின் நிலையை அடைந்தவன்போல் மாறுபடாதிருப்பான்.
|