பக்கம் எண் :

முதற் காண்டம்258

                       133
உடைத்தன நின்று பேருமென உயிர்த்தன மைந்தர் பேருமெனக்
குடைத்தழல் புண்டு ழாவலெனக் குறைத்துட லொன்று
                                    பேருமெனப்
பெடைத்தண ரன்றில் வாடுமெனப் பெயர்த்துயிர் நின்ற
                                    தேகமென
வடைத்தவ ரந்தை காலுமென வரற்றிவ ருந்தி வாடினளே
 
உடைத் தனம் நின்று பேரும் என, உயிர்த்தன மைந்தர் பேரும் என,
குடைத்து அழல் புண் துழாவல் என, குறைத்து உடல் ஒன்று
                                          பேரும் என,
பெடைத் தணர் அன்றில் வாடும் என, பெயர்த்து உயிர் நின்ற
                                          தேகம் என,
அடைத்த அரந்தை காலும் என அரற்றி வருந்தி வாடினளே.

     தான் கொண்டிருந்த செல்வம் தன்னைவிட்டு நீங்குவது போலவும்,
பெற்ற பிள்ளைகள் தாயை விட்டுப் பெயர்வது போலவும், புண்ணைக்
குடைந்து நெருப்புத் துழாவது போலவும், உடலில் ஒர் உறுப்பு தறிக்கப்
பட்டு நீங்குவது போலவும், தன் பெட்டையைப் பிரிந்த ஆண் அன்றில்
வாடுவது போலவும், உயிர் பிரிந்து கிடந்த உடல்போலவும் தன் நெஞ்சை
அடைந்த துன்பத்தைக் கக்குவதுபோல் மரியாள் வாய்விட்டுப் புலம்பி
வருந்தி வாடினாள்.

     உயிர்த்தன - உயிர்த்த: 'அன்' இடையே சாரியை. குடைத்து -
குடைந்து; பெயர்த்து - பெயர்ந்து; வலித்தல் விகாரங்கள்.
 
                     134
இருத்திய தந்தை தேவவள மெனத்தெரு ளுண்டு தேறியுயர்
கருத்தில ணிந்த மாணமுனி கழற்கள்ப ணிந்து காதலெழப்
பொருத்திய வன்பி னோகையொடு புடைத்துணை நின்ற
                                      பேதையரை
யருத்திக லந்த நீரிரிய வரற்றிய ணைந்து தாழுவளே.