பக்கம் எண் :

முதற் காண்டம்323

                  67
தாயொத் தார்வொடு தரித்திரர்க் கனைத்துமே யாகித்
தீயொத் தாகுலந் தீர்த்துளங் குளிரவண் முகிலாய்ப்
போயொத் தாலதைப் பெயர்க்கணி யொத்தனர் பெயரா
நோயொத் தாயகா னுகர்ந்துயிர் தருமருந் தொத்தார்.
 
தாய் ஒத்து ஆர்வொடு தரித்திரர்க்கு அனைத்துமே ஆகி,
தீ ஒத்த ஆகுலம் தீர்த்து உளம் குளிர வண் முகில் ஆய்,
பேய் ஒத்தால் அதைப் பெயர்க்க அணி ஒத்தனர்; பெயரா
நோய் ஒத்து ஆய கால் நுகர்ந்து உயிர் தரும் மருந்து                                       ஒத்தார்

     அவ்விருவரும் தாய் போன்று அன்போடு வறியவர்க்குத் தாமே
அனைத்துமாய் அமைந்தனர். தீயைப் போன்ற துயரங்களைத் தீர்த்து மனம்
குளிரச் செய்தலில் வளமான மழை மேகம் போல் ஆயினர்; யாரையேனும்
பேய் வந்து அடுத்தால், அதனைப் பெயர்த்து ஒட்டுதலில் படையணி
போன்று உதவினர்; நீங்காத நோய் வந்து அடுத்துத் துன்பம் ஏற்பட்டவிடத்து, எடுத்து அருந்துவதனால் உயிரை மீட்டுத்தரும் மருந்துபோல் ஆயினார்.

     ஒத்த + ஆகுலம் -- ஒத்தவாகுலம்; பெயர்க்க + அணி --
பெயர்க்கவணி: இவை முறையே 'ஒத்தாகுலம்' எனவும் 'பெயர்க்கணி'
எனவும் தொகுத்தல் விகாரம் கொண்டன.
 
                   68
பொய்யெ னப்படர் புழைப்படக் குடைந்தபுண் ணுடலை மெய்யெ னத்தயை வேர்விடு நெஞ்சினார் நோக்கி யையெ னத்தமுள் ளிரங்கிய தன்மையோ டப்புண் ணொய்யெ னக்கதி ருதித்திரு ளெனமறைந் ததுவே.
 
பொய் எனப் படர் புழைப் படக் குடைந்த புண் உடலை,
மெய் எனத் தயை வேர்விடு நெஞ்சினார், நோக்கி,
'ஐ!' எனத் தமுள் இரங்கிய தன்மையோடு, அப்புண்
ஒய் என, கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே.