"இருளே அணுகா
மறைவு அணுகா இரவிக்கு ஒளி ஆம்
திரு விழியை
மருளே அணுகா மூடுகின்றான்; வானும் மண்ணும் வழுவாது
ஆன்
அருளே மருளா, இவ் உலகிற்கு அயர்வு மாற, அயர்வு
இல்லான்,
தெருளே மருளா, மனம் துயிலா, திளை நான் களிப்பத்
துயில்கின்றான். |
"இருள் அணுகாமலும்
மறைவு அணுகாமலும் பகலவனுக்கே ஒளியாய்
விளங்கும் தன் திருக் கண்களை இக்குழந்தைநாதன் மயக்கம் அணுகாத
விதமாய் மூடிக்கொள்கின்றான்; சோர்வு என ஒன்றும் தனக்கு இல்லாதவன்,
வானுலகையும் மண்ணுலகையும் தவறில்லாமல் ஆளும் தன் அருள்
மயங்காமலும், இவ்வுலகிற்கு ஏற்பட்டுள்ள சோர்வு நீங்குமாறும், தன் அறிவுத்
தெளிவு மயங்காமலும், மனம் துயிலாமலும், அன்பில் திளைத்த நான்
களிப்புறுமாறு தான் தூங்குகின்றான்.
137 |
களித்த நாளி
லரும்புந்தென் காலே யினிதீங் கரும்புதியே
துளித்த நானத் தேனரும்பத் துணர்நாண் மலர்கா
ளரும்புதிரே
விளித்த நாகு மாங்குயில்காள் விளைதேன் பாவை
யரும்புதிரே
யளித்த நாத னான்கனிய வன்பு துயிலா துயில்கின்றான். |
|
"களித்த நாளில்
அரும்பும் தென்காலே, இனிது ஈங்கு
அரும்புதியே!
துளித்த நானத் தேன் அரும்ப, துணர் நாள் மலர்காள்,
அரும்புதிரே!
விளித்த நாகு மாங்குயில்காள், விளை தேன் பாவை
அரும்புதிரே!
அளித்த நாதன் நான் கனிய, அன்பு துயிலா, துயில்கின்றான். |
"மானிடரை மீட்டுக்
காக்க அவதரித்து வந்த ஆண்டவன், நான்
மகிழவும், தன் அன்பு தூங்காமலும், தான் கண் துயில்கின்றான்; எனவே,
மகிழ்ச்சியுற்ற நாளில் வந்து தோன்றும் தென்றற் காற்றே, இனிதாக இங்கு
வந்து வீசுவாயாக! இன்று அலரும் பருவத்துக் கொத்தான மலர்களே,
துளியாகக் கொண்ட மணமுள்ள தேன் துளிக்குமாறு மலருங்கள்!
|