பக்கம் எண் :

முதற் காண்டம்627

"கோ வீற்றிருந்து மகிழ்வோய் நீ; குலையா வயத்து ஒப்பு
                                   இகழ்ந்தோய் நீ;
நா வீற்றிருந்த புகழ்மிக்க நணுகாக் காட்சிக்கு இறையோய்
                                   நீ;
பூ வீற்றிருந்து நாம் வாழப் பூ வந்து, இடர் உற்று,
                                   அழுவோய் நீ;
ஆ வீற்றிராயோ என் இதயத்து! அதற்கே உறுதி புரியாயோ!

     "வானுலகில் வீற்றிருந்து மகிழ்பவனும் நீயே; குலையாத வல்லமையில்
ஒப்புமையெல்லாம் கடந்து நிற்பவனும் நீயே; புலவர் நாவில் வீற்றிருந்த
மிக்க புகழுரைக்கும் எட்டாத அறிவுக்கெல்லாம் தலைவனும் நீயே; பூவுலகில்
நாங்கல் நலத்தோடு வீற்றிருந்து வாழும்படியாக இப்பூவுலகில் மனிதனாய்
வந்து, எங்களுக்காகத் துன்பங்களை அனுபவித்து அழுபவனும் நீயே; ஆ!
என் இதயத்தில் நீ வீற்றிருக்க மாட்டாயோ! அதற்கான உறுதிப்பாட்டைத்
தர மாட்டாயோ!
 
                     141
நூல்வாய்ப் புகழ்மே லுயர்ந்தோய் நீ நோய்வாய் மருந்திற்
                                    கனிவோய்நீ
கோல்வாய்க் கோடா நீதிநெறி கொண்டெவ் வுலகும்
                                    புரந்தோய்நீ
வேல்வாய்க் குருதி பாய்ந்திறப்ப மெய்கொண் டாயோ
                                    விதையறியா
கால்வா யிலைபோற் றியங்கியவென் கருத்திற் குணர்வை
                                  யுணர்த்தாயோ.
 
"நூல் வாய்ப் புகழ் மேல் உயர்ந்தோய் நீ; நோய் வாய்
                             மருந்தின் கனிவோய் நீ;
கோல் வாய்க் கோடா நீதி நெறி கொண்டு எவ் உலகும்
                             புரந்தோய் நீ;
வேல் வாய்க் குருதி பாய்ந்து இறப்ப மெய் கொண்டாயோ?
                             இதை அறியா,
கால் வாய் இலை போல் தியங்கிய என் கருத்திற்கு உணர்வை
                             உணர்த்தாயோ?