சஞ்சோன்
வீரங் காட்டிய காசை நகரில் திருக்குடும்பம் மூன்று
நாள் தங்கிய நிகழ்ச்சியைக் கூறும் பகுதி. சஞ்சோன் வரலாறு ப. ஏ.,
நீதிபதிகள் ஆகமம், 13 - 16 அதி.
களரியினின்று
காசை செல்லும் வழி
-
விளம், - விளம், - மா, கூவிளம்
1 |
பள்ளியந்
தாமரைப் பறவை யார்ப்பெழத்
தெள்ளியம் வைகறை தெளிப்ப வாரணம்
வெள்ளியன் றுதித்திருட் படத்தை மேதினி
தள்ளியம் முகந்தரத் தடங்கொண் டேகினார். |
|
பள்ளி அம் தாமரைப்
பறவை ஆர்ப்பு எழ,
தெள்ளி அம் வைகறை தெளிப்ப வாரணம்,
வெள்ளி அன்று உதித்து, இருள் படத்தை மேதினி
தள்ளி அம் முகம் தர, தடம் கொண்டு ஏகினார். |
அழகிய தாமரை
மலரைப் படுக்கையாகக் கொண்ட
பறவைகளின் ஆரவாரம் எழவும், கோழிகள் கூவி அழகிய அதிகாலை
என்பதனை அறிவிக்கவும், அன்று விடிவெள்ளி உதித்து, நிலமகள்
இருளாகிய போர்வையை விலக்கித் தன் அழகிய முகத்தைக் காட்டவே,
திருக்குடும்பத்தினர் தடம் பிடித்து நடந்து சென்றனர்.
2 |
புதையொளிப்
பவளக்காற் பொலிய நீட்டிய
ததையொளி மரகதப் படத்துத் தைத்திருள்
வதையொளிப் பலமணி மான வாயெலாந்
துதையொளிப் பலமலர்ச் சோலை வண்ணமே. |
|
புதை ஒளிப் பவளக்
கால், பொலிய நீட்டிய
ததை ஒளி மரகதப் படத்துத் தைத்து, இருள்
வதை ஒளிப் பல மணி மான, வாய் எலாம்
துதை ஒளிப் பல மலர்ச் சோலை வண்ணமே. |
|