53 |
சுடரப் பொன்சுடுந்
தீயெனத் தொன்மறை
படரப் பொங்கிவ ரும்பகைப் பாசறை
யடரப் பொன்றில வாரண மெங்கணுந்
தொடரப் பொம்மிவ ளர்ந்துவி ளங்குமே. |
|
"சுடரப் பொன்
சுடும் தீ என, தொல்மறை
படர, பொங்கி வரும் பகைப் பாசறை
அடர, பொன்று இல ஆரணம், எங்கணும்
தொடரப் பொம்மி வளர்ந்து விளங்குமே. |
"மேலும் ஒளி
விடுமாறு பொன்னைச் சுடும் தீயைப் போல,
பழமையான வேதம் படரக் கண்டு, பொங்கி வரும் பகையாகிய
துன்பம் வந்து தாக்கவே, அதனால் வேதம் அழிதல் இல்லாமல்,
எங்கும் தொடர்ந்து பரந்து வளர்ந்து விளங்கும்.
54 |
வேண்டி யாவையும்
வேண்டுவ தன்மையா
லீண்டி லாக்கிய வீடுள நின்னருட்
டாண்டி மாற்றுவ ரீங்கில தாரணி
யாண்டி யாரும ளிக்குமி னோவென்றாள். |
|
"வேண்டு யாவையும்,
வேண்டுவ தன்மையால்
ஈண்டில் ஆக்கிய ஈடு உள நின் அருள்
தாண்டி மாற்றுவர் ஈங்கு இல, தாரணி
ஆண்டு, யாரும் அளிக்குமினோ !" என்றாள். |
"வேண்டுமென்ற
எல்லாவற்றையும், அவ்வாறு ஆகவேண்டுமென்று
நினைக்கும் தன்மையாலேயே இவ்வுலகில் ஆக்கக்கூடிய வல்லமை
கொண்ட உனது அருளைத் தாண்டி மாற்ற வல்லவர் இங்கு இல்லாத
விதமாய், இவ்வுலகத்தை நீயே ஆண்டு, யாவரையும் காப்பாயாக !" என்று
மரியாள் கூறிமுடித்தாள்.
வேண்டு
+ யாவையும் - வேண்டியாவையும்; ஆண்டு + யாரும் -
ஆண்டியாரும் : யகரம் வரக் குற்றுகரம் இகரமாயின. அளிக்குமின் -
'மின்' விகுதி ஒருமைக்கு வந்தது, புதியது புகுதலாகக் கொள்க.
|