பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்5

                    7
அறிவின்மை யுறவின்மை யறத்தி னின்மை யங்கட்சென்
னெறியின்மை நெறிதொலைக்கு முறுதி யின்மை நெறிதன்னிற்
பறியின்மை சார்பின்மை தன்பா லின்மை பரிசல்லாற்
பிறிவின்மை யோர்ந்துளைந்தா னுளைந்து மீண்டே பிரிவுற்றான்.
 
அறிவு இன்மை, உறவு இன்மை, அறத்தின் இன்மை, அங்கண் செல்
நெறி இன்மை, நெறி தொலைக்கும் உறுதி இன்மை, நெறி தன்னில்
பறி இன்மை, சார்பு இன்மை, தன்பால் இன்மை பரிசு அல்லால்
பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான்; உளைந்து, மீண்டே பிரிவு
                                             உற்றான்.

     அங்கு அறிமுகமானவர் இல்லாமை, உறவினர் இல்லாமை,
அறவுணர்வு கொண்டவர் இல்லாமை, அங்குச் செல்லும் வழித் தெரியாமை,
வழியைக் கடந்து தொலைக்கும் துணை இல்லாமை, வழியில் பொன்
இல்லாமை, பிற சார்பு எதுவும் இல்லாமை, தன்னிடம் வறுமைத்தன்மையே
அல்லாமல் வேறொன்றும் இல்லாமை - இவற்றையெல்லாம் நினைந்து
வருந்தினான்; இவ்வாறெல்லாம் சிறிது நேரம் வருந்தியும், பின் அங்கிருந்து
பிரிந்து மரியாளிடம் சென்றான்.

                    எசித்துப் பயணம்

     - விளம், - விளம், - மா, கூவிளம்

 
                                           8
வேரியந் தாரினான் விரைந்தெ ழுந்தனன்
மாரியந் தாரையின் வளர்கண் டாரைநீர்
நேரியந் துணைவியை நேடி நாயகன்
றேரியங் கேவிய பணியைச் செப்பினான்.
 
வேரி அம் தாரினான் விரைந்து எழுந்தனன்;
மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர்
நேரி, அம் துணைவியை நேடி, நாயகன்
தேரி அங்கு ஏவிய பணியைச் செப்பினான்.