108 |
பொய்நிறத்
துரைத்த திழிவுற வெளியாய்ப் பூதலத் தொருப்படப்
பிறந்து
மெய்நிறத் துயர்தொல் வேதம தென்றும் விரியொளி
மணிமுடி வேந்தர்
செய்நிறக் குலத்தோ னம்முனி யென்றுந் திருப்புகழ்
கலைநிறை மாட்சி
பெய்நிறத் தவனா டென்றுமாங் குணர்கிற் பிழையுனக்
கென்றனன் வேந்தே. |
|
"பொய் நிறத்து
உரைத்தது இழிவு உற வெளி ஆய், பூதலத்து
ஒருப்படப் பிறந்து
மெய் நிறத்து உயர் தொல் வேதம் அது என்றும், விரி ஒளி மணி
முடி வேந்தர்
செய் நிறக் குலத்தோன் அம் முனி என்றும், திருப் புகழ் கலை
நிறை மாட்சி
பெய் நிறத்து அவன் நாடு என்றும் ஆங்கு உணர்கில், பிழை
உனக்கு" என்றனன் வேந்தே. |
பேய்க்கரசன்
அது கேட்டு, "நீ பொய்யைத் தழுவி உரைத்தது
உனக்கே இழிவைத் தருமாறு வெளிப்பட்டு, அதுவே பூமியில் ஒன்றாக
உடன் தோன்றி மெய்யோடு பொருந்தி உயர்ந்த பழமையான வேதமென்றும்,
அம் முனிவன் விரிந்த ஒளி கொண்ட மணி முடியை அணியும் மன்னரைப்
பிறப்பித்த புகழ்பெற்ற குலத்தில் பிறந்தவன் என்றும், தெய்வத் திருப்புழும்
கலைகளும் நிறையக் கொண்ட மாண்பு பொருந்திய தன்மையது
அவனுக்குரிய நாடு என்றும் அங்கு எசித்தியர் உணர்வாராயின், உனக்குக்
கேடு" என்றான்.
109 |
எண்வழி
தவறி யுள்ளிய சூட்சி யிதுவென வெறியெலா மிரட்ட
விண்வழி யசனி யொலியெழ நக்கு வெவ்வினைச் சடக்கலி
விளம்புங்
கண்வழி யுற்ற வுணர்வின்முன் மாக்கட் காதிடு முணர்வெவன்
செய்யுந்
தெண்வழி யுவரிச் சுறவுதன் காதை தெரிகிலேற் கேண்மினோ
வென்றான். |
|