பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்544

             117
இன்புறப் பாற்கலந் தேத மூட்டுதீர்
துன்புற வெருட்டுதீர் துதியை யாடுதீ
ரன்புற வணிகுதீ ரனைவ ருங்கனற்
பின்புற வருந்துதீர் பிழைப்பெ மக்கிதே.
 
"இன்பு உறப் பால் கலந்து ஏதம் ஊட்டுதீர்;
துன்பு உற வெருட்டுதீர்; துதியை ஆடுதீர்;
அன்பு உற அணுகுதீர்; அனைவரும் கனல்
பின்பு உற வருந்துதீர்; பிழைப்பு எமக்கு இதே.

     "மக்கள் இன்புறுமாறு பாலைக் கலந்தாற் போலப் பாவத்தை
இன்பத்தோடு கலந்து ஊட்டுங்கள். தேவை நோக்கி, துன்புறச் செய்து
அஞ்சச் செய்யுங்கள்; புகழை வேண்டிய விடத்துக் கையாளுங்கள்;
அன்பு கொண்டுள்ளதாகக் காட்டி அணுகுங்கள்; அனைவரும் பின் நரக
நெருப்பில் வந்து சேருமாறு முயலுங்கள். இதுவே நமக்குப் பிழைப்புத்
தொழில்.

              118
உள்ளிய வஞ்சனை யுதவ வவ்விரு
தெள்ளிய அறிவினோர் திறம்பி லாத்தவம்
விள்ளிய முறையொடு வினைகொண் டாலலா
லெள்ளிய கசடுகுத் தெசித்தி லாளவோ.
 
"உள்ளிய வஞ்சனை உதவ, அவ் இரு
தெள்ளிய அறிவினோர், திறம்பு இலாத் தவம்
விள்ளிய முறையொடு, வினை கொண்டால் அலால்,
எள்ளிய கசடு உகுத்து எசித்தல் ஆளவோ?

     "நாம் கருதிய வஞ்சனை நமக்கு உதவும்படி, சூசையும் மரியாளுமாகிய
தெளிந்த அறிவு படைத்த அவ்விருவரும், தவறுதல் இல்லாத தம் தவத்தைக்
கைவிட்ட முறையோடு, பாவத்தைச் செய்யவும் முற்பட்டாலன்றி, இகழப்படும்
பாவத்தைப் பெய்து எசித்தில் நாம் ஆள இயலுமோ?